என் மலர்
நீங்கள் தேடியது "ஆரி அர்ஜூனன்"
- ஒரு குடியிருப்பு தளத்தில் நான்காவது மாடியில் நடைபெறும் சம்பவங்களே கதைக்கருவாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.
- தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் ஆரி அர்ஜூனன். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதன்மூலம் பிரபலமும் ஆனார். இவர் தற்போது நடித்துள்ள படம் 'போர்த் ப்ளோர்' (Fourth Floor).
எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கி மனோ கிரியேஷன்ஸ் சார்பில் ஏ. ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக ஆரி அர்ஜுனன் நடிக்க, கதாநாயகியாக தீப்ஷிகா நடித்துள்ளார். மேலும், பவித்ரா, இயக்குனர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஒரு குடியிருப்பு தளத்தில் நான்காவது மாடியில் நடைபெறும் சம்பவங்களே கதைக்கருவாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை வருகிற 27-ந்தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், 'போர்த் ப்ளோர்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. டிரெய்லரில் அடுக்குமாடி கட்டிடத்தின் நான்காவது மாடியில் ஒரு வீட்டில் நிகழ்ந்த தற்கொலைகளை சுற்றி நிகழும் சம்பவங்களே திரில்லராக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
- சேரன் இயக்கிய வெப் சீரிசில் ஆரி நடித்திருந்தார்.
- இந்த படத்தை ராஜசேகரபாண்டியன் இயக்குகிறார்.
சேரனின் ஜர்னி வெப் சீரிசை தொடர்ந்து நடிகர் ஆரி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஆரிக்கு ஜோடியாக லக்ஷமி மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது.

மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் ராஜசேகரபாண்டியன் இயக்குகிறார். படக்குழு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய இதர தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
முன்னதாக நடிகர் ஆரி சேரன் எழுதி, இயக்கிய வெப் சீரிஸ்- சேரனின் ஜர்னி-யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சோனி லிவ் ஒ.டி.டி. தளத்தில் வெளியான இந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது.
- இந்த படம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது.
- ஆரி அர்ஜுனுக்கு ஜோடியாக தீப்ஷிகா நடிக்கிறார்.
மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரிக்க, இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது. ரிலீஸ் என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது.
சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில், இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருப்பதாக இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் ஆரி அர்ஜுனுக்கு ஜோடியாக தீப்ஷிகா நடிக்கிறார். இவர்களுடன் ஆராத்யா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஜெ லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.






