என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்கோவில்கள்"

    • அம்மனுக்கு கண்மலர் வாங்கி சாற்றினால், கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்கிறார்கள்.
    • மிகவும் புனிதமானதாக கருதப்படும் இந்த தீர்த்தம், தீராத நோய்களையும் தீர்ப்பதாக நம்பப்படுகிறது.

    * சென்னையில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநின்றவூர். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் 'இருதயாலீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    * கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம் இருக்கிறது. இங்குள்ள அன்னைக்கு பச்சரிசி மாவு, சர்க்கரை, வெல்லம் சேர்த்து 'மண்டையப்பம்' எனும் நைவேத்தியம் செய்து படைத்தால் தீராத தலைவலியும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

    * நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ளது, நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில். இந்த அம்மனுக்கு கண்மலர் வாங்கி சாற்றினால், கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்கிறார்கள்.

    * திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் எனும் ஊரில் அமைந்துள்ளது, கங்கையம்மன் கோவில். இந்த அன்னைக்கு அபிஷேகம் செய்த தீர்த்தமானது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மிகவும் புனிதமானதாக கருதப்படும் இந்த தீர்த்தம், தீராத நோய்களையும் தீர்ப்பதாக நம்பப்படுகிறது.

    * தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் கோமதியம்மன் கோவிலில், அம்மன் சன்னிதி முன்பாக ஸ்ரீசக்கர பீடம் உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து 40 நாட்கள் அதில் அமர்ந்து வழிபட்டு வந்தால் மன நல பிரச்சனைகள் குணமாகும் என்று கூறப்படுகிறது.

    * திருவள்ளூர் மாவட்டம் மணவூர் கிராமத்தில் இயற்கை எழில் சூழ்ந்த வயல்வெளிகளுக்கு இடையே அமைந்துள்ளது, ஆதி காமாட்சி அம்மன் சமேத கற்கடேஸ்வரர் திருக்கோவில். இத்தலத்தில் தொடர்ச்சியாக 9 திங்கட்கிழமைகள் வந்து, இறைவனுக்கு வெல்லம் படைத்து வழிபட்டால் புற்றுநோய் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை.

    • ஒரு சில இடங்களை கட்டளைதாரர்கள் பெயரில் சிலர் உள்குத்தகைக்கு விட்டு ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.
    • மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு சுமார் ரூ.8 கோடியாகும்.

    நாகர்கோவில்:

    இந்து சமய அறநிலையத்துறை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான விவசாய நிலங்கள் தென்காசி மாவட்டத்தில் இருக்கின்றன. அந்த நிலங்களுக்கு கட்டளைதாரர்கள், மாலைக்கட்டு வரிதாரர்கள் முறையாக கட்டளை செய்யாமல் இருந்து வந்தனர்.

    இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட நபர்களிடம் நேரில் தகவல் தெரிவித்தும் கட்டளை செய்யாமல் இருந்து வந்தனர். ஒரு சில இடங்களை கட்டளைதாரர்கள் பெயரில் சிலர் உள்குத்தகைக்கு விட்டு ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.

    இந்நிலையில் கட்டளை செய்யப்படாத கிளாங்காடு ஜமதக்னீஸ்வரர், இலத்தூர் மதுநாதசுவாமி, புளியரை கிருஷ்ணசாமி ஆகிய கோவிலுக்கு சொந்தமான கட்டளை நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த 5 நபர்களிடம் இருந்து சுமார் 4 ஏக்கர் இடம் அளவீடு முடிந்து அறிவிப்பு பலகை குமரி மாவட்ட கோவில்கள் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் தலைமையில் நிறுவப்பட்டது.

    மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு சுமார் ரூ.8 கோடியாகும். அப்போது சூப்பிரண்டு ஆனந்த், பொறியாளர் அய்யப்பன், ஸ்ரீகாரியம் ரத்தினவேலு, கோபாலகிருஷ்ணன், நவீன், தொழில்துட்ப உதவியாளர் பிரேம், தி.மு.க.கிளை செயலாளர் கிளாங்காடு ராமர், தங்கராஜ், நில அளவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×