என் மலர்
நீங்கள் தேடியது "இந்திரா"
தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக் மற்றும் இர்ஃபான் மாலிக் இணைந்து தயாரித்த திரைப்படம் "இந்திரா." அறிமுக இயக்குநர் சபரிஷ் நந்தா இயக்கத்தில் உருவான இந்திரா திரைப்படத்தில் வசந்த் ரவி மற்றும் மெஹ்ரீன் பிர்சதா இணைந்து நடித்தனர். இந்தப் படத்தில் அனிகா சுரேந்திரன், சுனில், கல்யாண் மாஸ்டர், சுமேஷ் மூர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்திரா திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் தேவ் சூர்யா.
இவர் அளித்த பேட்டி பின்வருமாறு:-
தமிழ் திரையுலகில் நான் "இந்திரா" திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானேன். முன்னதாக 2018ஆம் ஆண்டு கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்தேன். எனினும், அந்தப் படம் இதுவரை வெளியாகவில்லை.
எனக்கு தமிழ் மொழி மீது இருந்த விருப்பம் தான் பாடலாசிரியர் ஆகியிருக்கிறேன்.
திரையுலகில் பாடலாசிரியராக நான் அறிமுகமான படம் இந்திரா தான். இந்தப் படம் தொடங்கும் முன்பிருந்தே நான் இசையமைப்பாளர் அஜ்மல் தஹ்சீனுடன் இணைந்து அவ்வப்போது ஜேமிங் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தோம். அந்த வகையில் தான் இந்திரா படத்திற்கு பாடலாசிரியராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
சினிமாவில் பாடலிசிரியராக வருவதே நான் காணாத கனவு தான். இதை கனவு என்று கூற முடியாது, ஆனால் மாற்றத்தில் நானும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகன் வசந்த் ரவி, அதீத மதுப்பழக்கம் கொண்டவராக இருக்கிறார்.
- மனைவி இறப்புக்குப் பிறகு உணர்ச்சிப்பூர்வமாக நடித்து நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
கதைக்களம்
போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகன் வசந்த் ரவி, அதீத மதுப்பழக்கம் கொண்டவராக இருக்கிறார். அப்படி ஒரு நாள் ட்யூட்டியில் இருக்கும் போது குடித்துவிட்டு ஒரு விபத்தை ஏற்படுத்தியதால் இவரை பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்படுகிறார். இதனால் இவரது மதுப்பழக்கம் இன்னும் அதிகமாகிறது. இதனால் இவரது பார்வை பறிபோகிறது. இதற்கு பிறகு தன் மனைவி மெஹ்ரீன் பிர்சாடா துணையுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னையில் ஒரே பாணியிலான தொடர் கொலைகள் நடக்கிறது. கொலையாளியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடும் காவல்துறை சரியான துப்பு கிடைக்காமல் தடுமாற, திடீரென்று அதே பாணியில் வசந்த் ரவியின் மனைவி மெஹ்ரீன் பிர்சாடாவும், உள்பக்கம் தாளிட்ட வீட்டுக்குள் கொலை செய்யப்படுகிறார்.
காவல் துறை ஒருப்புறம் சைக்கோ கொலையாளியை தேட மறுப்புறம் சந்த் ரவியோ தனது மனைவியை கொலை செய்த சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்க, தனது போலீஸ் நண்பரின் உதவியோடு களத்தில் இறங்குகிறார்.
வசந்த் ரவி கொலையாளியை கண்டுபிடித்தாரா?, உண்மையான கொலையாளி யார் ?, வசந்த் ரவியின் மனைவி எப்படி கொல்லப்பட்டார் ? ஆகிய கேள்விகளுக்கான பதில்களை திக்...திக்...திருப்பங்களோடு சொல்வது தான் படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகனாக நடித்திருக்கும் வசந்த் ரவி, அழுத்தமான கதாபாத்திரத்தில் ஓவராக அல்லாமல் அளவாக நடித்திருப்பது படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. கண் பார்வை இழந்தவராக மிக கச்சிதமாக நடித்திருப்பவர், மனைவி இறப்புக்குப் பிறகு உணர்ச்சிப்பூர்வமாக நடித்து நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மெஹ்ரீன் பிர்சாடா கணவரின் சரியில்லாத போக்கைப் பார்த்து கோபம் கொள்வதும், பிறகு அவருக்காக கலங்குவதும் என்று கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
சீரியல் கில்லராக நடித்திருக்கும் சுனில், தான் செய்யும் கொலைகளை கொண்டாடும் விதமும், மகிழ்ச்சியில் சிரிக்கும் விதமும் பார்வையாளர்களை பீதியடைய செய்கிறது.
அனிகா சுரேந்தர் அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் பார்வையாளர்களை கவர்கிறார்.
வசந்த் ரவியின் நண்பராக நடித்திருக்கும் நாகேந்திரா, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நடன இயக்குநர் கல்யாண் இருவரும் இயல்பாக நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இயக்கம்
எழுதி இயக்கியிருக்கும் சபரிஷ் நந்தா, சைக்கோ கொலையை கதைக்களமாக கொண்டு திரைக்கதை அமைத்திருந்தாலும், அதன் பின்னணியில் ஒரு மிகப்பெரிய மர்ம முடிச்சோடு படத்தை மிக சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார். நாம் பார்த்திராத ஒரு கதை பின்களத்தோடு இயக்கியுள்ளார் மேலும் படத்தில் வரும் திருப்பங்கள் யூகிக்க முடியாமல் இருப்பது படத்தின் பெரிய பலம். நாமே அந்த கொலையை இன்வெஸ்டிகேஷன் செய்யும் ஒரு உணர்வை உருவாக்கியது படத்தின் அடுத்த பலம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் லைட்டிங் மற்றும் பிரேம்கள் மூலம் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியுள்ளது.
இசை
இசையமைப்பாளர் அஜ்மல் தஷீன் இசையில் பாடலும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
தயாரிப்பு
JSM Movie Production, Emperor Entertainment நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ரேட்டிங்: 3/5
- வசந்த் ரவி அடுத்ததாக இந்திரா படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் வசந்த் ரவி ராக்கி மற்றும் ஜெயிலர் படங்களின் மூலம் மக்களின் மனதில் மிக ஆழமாக பதிந்தார். வசந்த் ரவி அடுத்ததாக இந்திரா படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தில் வசந்த் ரவி, போலீஸ் அதிகாரி, காதலன் மற்றும் பார்வையற்ற என கலவையான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லரில் அடையாளம் காண முடியாத தொடர் கொலைகாரனை பிடிக்க போலீசார் மேற்கொள்ளும் விசாரணையுடன் தொடங்குகிறது. கல்யாண் மாஸ்டர், இந்த விசாரணையை முன்னெடுக்கும் அதிகாரியாக நடிக்கிறார். அதே நேரத்தில், பார்வையற்ற வசந்த் ரவி, தனது நண்பரின் உதவியுடன் கொலைகாரனை தனிப்பட்ட முறையில் தேடுகிறார்.
மற்றொரு காட்சியில் அங்கு அவர் ஒரு போலீசராக மெஹ்ரீன் பிர்சாதாவுடன் காதலில் இருப்பது போல. சுனில், வில்லனாக தோன்றும் விதத்தில் சற்று வினோதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிகா சுரேந்திரனும் சிறப்பான காட்சிகளில் தோன்றுகிறார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாகிறது.
- சபரீஷ் நந்தா தற்போது இயக்குனராக அறிமுகமாகிறார்.
- இந்த படத்திற்கு இந்திரா என பெயரிடப்பட்டுள்ளது.
ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வசந்த் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படத்திற்கு இந்திரா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் சார்பில் இர்ஃபான் மாலிக்கும் இணைந்து தயாரித்து வசந்த ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு "இந்திரா" என்று பெயரிட்டுள்ளனர்.

நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற நவரசா போன்ற படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா, தற்போது இயக்குனராக அறிமுகமாகிறார். வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசன்டா நடிக்கிறார்.
மேலும் இவர்களுடன் அனிகா சுரேந்திரன், சுனில், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தற்போது இப்படத்திற்கு இந்திரா என தலைப்பு வைக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.






