என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோட்டு-புத்தகங்கள்"

    • தி.மு.க. சார்பில் மாணவர்களுக்கு நோட்டு-புத்தங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
    • நிகழ்ச்சியில் ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நாளை மறுநாள் ( 27-ந் தேதி) கொண்டாடப்படுகிறது.

    அதனை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தென்காசி கலைஞர் அறிவாலயத்தில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு-புத்தங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பா ளர் கிருஷ்ணராஜா முன்னிலை வகித்தார்.

    இதில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கி தென்காசியில் உள்ள திருவள்ளுவர் தொடக்கப் பள்ளி, நேரு உயர்நிலைப் பள்ளி, பொன்னம்பலம் நடுநிலைப்பள்ளி மற்றும் செயின்ட் ஜான்சன் உயர் நிலைப்பள்ளியை சேர்ந்த பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு-புத்தகங்கள், பென்சில் மற்றும் பேனா ஆகியவற்றை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார், சுப்பிரமணி யன், முகமது அப்துல் ரஹிம், ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் , தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், நகர, பேரூர் செயலாளர்கள், மகளிரணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் முகமது அப்துல் ரஹிம் செய்திருந்தார்.

    ×