என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்பா பயிர் காப்பீடு"

    • கடந்த வருடம் 10 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டது.
    • வேளாண்மைத் துறை அலுவலர்கள் தத்தம் பகுதிகளில் உள்ள விவசாயிகளை அணுகி பயிர் காப்பீடு செய்திடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது, விவசாயிகள் சம்பா நெற்பயிரை முழு வீச்சில் சாகுபடி செய்து வருகின்றனர். இதுவரை 26.25 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்நாள் வரை, 6.27 லட்சம் விவசாயிகளால் 15 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பில் 57 சதவீதமாகும். இதே நாளில் கடந்த வருடம் 10 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டது.

    இந்நிலையில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுது றை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய 27 மாவட்டங்களில் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி 2025 நவம்பர் 15-ந் தேதி என அறிவிக்கை செய்யப்பட்டது.

    எனினும் பல மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக குறுவை நெல் அறுவடை மற்றும் சம்பா நெல் நடவு பணிகள் தாமதமானதாலும், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதால் அடங்கல் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாலும், சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க, விடுபட்ட அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கிணங்க சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை 2025 நவம்பர் 30-ந்தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    முதலமைச்சரின் துரித நடவடிக்கையின் பேரில் சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர் செய்யும் விவசாயிகளின் நன்மையை கருதி பயிர் காப்பீடு செய்யும் காலக்கெடுவானது நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே வேளாண்மைத் துறை அலுவலர்கள் தத்தம் பகுதிகளில் உள்ள விவசாயிகளை அணுகி பயிர் காப்பீடு செய்திடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    எனவே, அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடு துறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நவம்பர் 30-ந்தேதிக்குள் பதிவு செய்து பயனடையுங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சம்பா பயிருக்கு காப்பீடு செய்ய கால நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிரை கடந்த 15-ந் தேதி வரை காப்பீடு செய்யலாம் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

    விவசாயிகளின் கோரிக்கை யினை தொ டர்ந்து, தமிழக அரசின் தொடர் நடவடிக்கையின் காரணமாக ஒன்றிய அரசு சம்பா நெற்பயிரை வரும் 22-ந் தேதி வரை காப்பீடு செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கியுள்ளது.

    சம்பா நெல்-11 பயிருக்கு இது நாள் வரை பயிர் காப்பீடு செய்யாத விவசா யிகள் நெல்-11 பயிர்காப்பீடு செய்ய ஒரு ஏக்கருக்கு பிரிமியத் தொகையான ரூ.529/-யை 22.11.2023க்குள் செலுத்தி இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

    எனவே சம்பா பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ.சேவை மையங்கள்) இணைய தளத்தில் உள்ள விவசா யிகள் நேரடியாகவோ நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவிற்குள் காப்பீடு செய்ய வேண்டும். விவசா யிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ.அடங்கல், விதைப்புச்சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து மேற்குறிப்பிட்ட பீரிமியத்தொகையை செலுத்தி வருகிற 22-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    இந்த தகவலை மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    ×