என் மலர்
நீங்கள் தேடியது "அரிவாளால் தாக்கி"
- டேனியலுக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
- கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மா பேட்டை அருகே சின்னபள்ளம் பகுதியை சேர்ந்தவர் டேனியல் (வயது 44). இவர் பூதப்பாடியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பஸ் மேனேஜராக உள்ளார்.
இவர் நேற்று மதியம் தனது மனைவி எலிசபெத் (40), மகள் ஜோவிட்டா ஜாஸ்மின் (20) ஆகியோருடன் தனது மோட்டார் சைக்கி ளில் பூதப்பாடியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடைக்கு சென்றனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சின்ன பள்ளத்தை சேர்ந்த டேவிட் என்பவர் டேனியல் மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல் வந்தார்.
இதையடுத்து டேனியல் எதற்காக என் மீது மோதுவது போல் வந்தாய் என டேவிட்டிடம் கேட்டார். இதில் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து டேவிட் தனது மோட்டார் சைக்கிள் வைத்திருந்த அரிவாளை எடுத்து டேனியலை தாக்க முயன்றார்.
இதை தடுத்த போது டேனியலுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. அதேபோல் தடுக்க முயன்ற எலிசபெத் மற்றும் ஜோவிட்டா ஜாஸ்மினுக்கும் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. பட்டப் பகலில் நடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியது.
இதை தொடர்ந்து டேவிட், டேனியலை பார்த்து இப்போது தப்பித்து விட்டாய் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து காயம் அடைந்த 3 பேரையும் அப்பகுதியினர் 108 ஆம்புலன்சு மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து டேவிட்டை வலை வீசி தேடி வருகின்றனர்.






