என் மலர்
நீங்கள் தேடியது "மாநகராட்சியில்"
- நாகர்கோவில் மாநக ராட்சி 16-வது வார்டுக் குட்பட்ட பரமேஸ்வரன் தெருவில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம்
- ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி
நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சி 16-வது வார்டுக் குட்பட்ட பரமேஸ்வரன் தெருவில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 32-வது வார்டுக்குட்பட்ட செயின்ட் பிரான்சிஸ் தெருவில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகிய பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். இதில் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர்கள் சிஜி, மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் சேக் மீரான், அணிகள் நிர்வாகிகள் ராஜன், ராதாகிருஷ்ணன்,
சரவணன், பீட்டர், வட்ட செயலாளர் மைக்கேல் ராஜ், ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாகர்கோவில் மாநகராட்சியில் 8-வது வார்டுக்குட்பட்ட அம்மன் கோவில் 6-வது குறுக்கு தெருவில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் படிக்கட்டு அமைக்கும் பணி
- ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சியில் 8-வது வார்டுக்குட்பட்ட அம்மன் கோவில் 6-வது குறுக்கு தெருவில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் படிக்கட்டு அமைக்கும் பணி மற்றும் 52-வது வார்டுக்குட்பட்ட தெங்கம்புதூர், புதுக்குடியிருப்பு குறுக்குசாலை, அஞ்சுகுடியிருப்பு மற்றும் பெருமாள்புரம் முதல் குளத்துவிளை செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
அப்போது மாமன்ற உறுப்பினர்கள் சேகர், ரமேஷ், தொழில்நுட்ப அதிகாரி பாஸ்கர், மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் சேக் மீரான், இளைஞர் அணி செயலாளர் அகஸ்தீசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






