search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
    X

    நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

    • நாகர்கோவில் மாநக ராட்சி 16-வது வார்டுக் குட்பட்ட பரமேஸ்வரன் தெருவில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம்
    • ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி


    நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சி 16-வது வார்டுக் குட்பட்ட பரமேஸ்வரன் தெருவில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 32-வது வார்டுக்குட்பட்ட செயின்ட் பிரான்சிஸ் தெருவில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகிய பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். இதில் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர்கள் சிஜி, மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் சேக் மீரான், அணிகள் நிர்வாகிகள் ராஜன், ராதாகிருஷ்ணன்,
    சரவணன், பீட்டர், வட்ட செயலாளர் மைக்கேல் ராஜ், ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×