என் மலர்
நீங்கள் தேடியது "ரூ.8 லட்சத்து 59 ஆயிரத்துக்கு"
- தேங்காய்கள் மற்றும் தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.
- ரூ.8 லட்சத்து 59 ஆயிரத்து 850-க்கு விளைபொருட்கள் விற்பனையாகின.
சிவகிரி:
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 222 மூட்டைகளில் 7 ஆயிரத்து 15 கிலோ எடையுள்ள நிலக்கடலைக்காயை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இது கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.65.59 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.84.50 காசுகள், சராசரி விலை யாக ரூ.81.40 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.4 லட்சத்து 96 ஆயிரத்து 227-க்கு விற்பனையானது.
இதேபோல மொடக்குறி்ச்சி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் தேங்காய்கள் மற்றும் தேங்காய் பருப்பு விற்பனை க்கான ஏலம் நடந்தது.
இதில் 11 ஆயிரத்து 258 எண்ணிக்கையிலான 4 ஆயிரத்து 569 கிலோ எடையுள்ள தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ ரூ.24.49 காசுகள், அதிகபட்ச விலை யாக ரூ.26.60 காசுகள், சராசரி விலையாக ரூ.25.81 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 543-க்கு விற்பனையானது.
இதனையடுத்து நடந்த தேங்காய் பருப்பு விற்பனை க்கான ஏலத்தில் 119 மூட்டைகள் கொண்ட 3 ஆயிரத்து 178 கிலோ எடை யுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.
விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ77 .69 காசுகள், அதிகபட்ச விலை யாக ரூ.82.82 காசுகள், சராசரி விலையாக ரூ.82.29 காசுகள் என்ற விலை களிலும், 2-ம் தர பருப்பு குறைந்த பட்ச விலையாக ரூ.61.60 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.73.89 காசுகள்சராசரி விலையாக ரூ.68.87 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 46 ஆயிரத்து 080-க்கு விற்பனையானது.
மொத்தம் சிவகிரி மற்றும் மொடக்குறி்ச்சி ஒழுங்கு முறை விற்பனைக்கூ டங்களில் ரூ.8 லட்சத்து 59 ஆயிரத்து 850-க்கு விளை பொருட்கள் விற்பனையாகின.






