என் மலர்
நீங்கள் தேடியது "வன உயிரின பாதுகாப்பு"
- பொது மக்களுக்கு வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு வனத்துறை மூலமாக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
- இந்த சைக்கிள் பேரணி, திருப்பூர் அவினாசி ரோடு புஷ்பா தியேட்டர் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி அவிநாசி, பெருமாநல்லூர் வழியாக நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை சென்றடைந்தது.
திருப்பூர்:
திருப்பூர் வனக்கோட்டம், திருப்பூர் வனச்சரகத்தில் ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் கடந்த ஒரு வார காலமாக வன உயிரின வார விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வன உயிரின வார விழாவின் கடைசி நாள் கொண்டாட்டங்களாக வன உயிரினங்களின் பாதுகாப்பை வலியுறுத்தி திருப்பூர் வனச்சரகத்தில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர் மற்றும் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆகியோர் கலந்து ெகாண்டு வன உயிரின பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் சைக்கிள் ஓட்டினர். மேலும் பொது மக்களுக்கு வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு வனத்துறை மூலமாக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த சைக்கிள் பேரணி, திருப்பூர் அவினாசி ரோடு புஷ்பா தியேட்டர் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி அவிநாசி, பெருமாநல்லூர் வழியாக நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து மரம் நடும் விழாவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.






