என் மலர்
நீங்கள் தேடியது "பெரியம்மாவின் வீடு"
- திவ்யா கடலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் நர்சாக பணி செய்து வந்தார்.
- இது குறித்து ராஜலட்சுமி, கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கடலூர்:
கடலூர் நத்தப்பட்டு அருகேயுள்ள டி.குமாரபுரத்தை சேர்ந்தவர் ராஜலட்சுமி மகள் திவ்யா (வயது 24). இவர் செம்மண்டலத்தில் உள்ள தனது பெரியம்மாவின் வீட்டில் தங்கி, கடலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் நர்சாக பணி செய்து வந்தார். கடந்த 11-ந் தேதி காலை 6 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்ற திவ்யா வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ராஜலட்சுமி, கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், காணாமல் போன நர்சு திவ்யாவை தேடி வருகின்றனர்.






