என் மலர்
நீங்கள் தேடியது "புளியம்பட்டி பகுதியில்"
- பு.புளியம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- சோதனை நடத்திய பிறகு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம், லாட்டரி சீட்டுகள் விற்ப னை, குட்கா மற்றும் ரவுடி கள் செயல்பாடு போன்ற சட்ட விரோத செயல்களை ஒழிக்க ஈரோடு மாவட்ட மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு ஜவகர் அனைத்து போலீஸ் நிலையமங்க ளுக்கும் உத்தரவிட்டார்.
மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற ங்களை தடுக்க மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீ சார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாண வர்கள் போதைப் பொருள்க ள் பயன்படுத்து கிறார்களா என தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் புகார் மற்றும் அவர்களது பிரச்சினைகள் குறித்து உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
இதையடுத்து பு.புளி யம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் பவானி சாகர் சாலை, நால்ரோடு சோதனைசாவடி மற்றும் பு.புளியம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதில் வாகனங்களின் ஆ.ர்.சி., இன்சூ ரன்ஸ், லைசென்ஸ், பர்மிட் உள்ளி ட்ட ஆவணங் ளை சரி பார்த்தனர். மேலும் வாக னங்களில் எடுத்து வரும் பொருள்களை போலீசார் சோதனை நடத்திய பிறகு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
- ஊர்வலமாக வந்து விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு எடுத்து செல்ல உள்ளனர்.
- 400 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டி செய்து வழிபட்டு வந்தனர்.
அதனைத்தொடர்ந்து இன்று இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 10 அடி விநாயகர் சிலை உள்பட மொத்தம் 36 சிலைகள் சத்தியமங்கலம் சாலை, பவானிசாகர் சாலை,
மாதம்பாளையம் சாலை, நம்பியூர் சாலை மற்றும் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு எடுத்து செல்ல உள்ளனர்.
இன்று மாலை நடக்க இருக்கும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின்படி சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
விநாயகர் சிலைகள் செல்லும் அனைத்து சாலைகளிலும், முக்கிய வீதிகளிலும் சி.சி.டி.வி. கேமிராக்களை பொருத்தப்பட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
எந்த ஒரு பிரச்சனை மற்றும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமை யிலான போலீசார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஐமன் ஜமால், இன்ஸ்பெக்டர் அன்பரசு உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.






