என் மலர்
நீங்கள் தேடியது "கபடி போட்டி"
- 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.
- பெண்கள் அணி ஈரானுக்கு எதிரான இறுதியில் வென்று தங்கப்பதக்கத்தை வென்றது.
ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி 2025 (3வது பதிப்பு) தற்போது பஹ்ரைனில் (மனாமா) நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.
இதில் இந்தியா கபடி போட்டியில் இரு தங்கங்களை வென்றுள்ளது: ஆண்கள் அணி ஈரானை 35-32 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றது. அதேபோல் பெண்கள் அணியும் ஈரானுக்கு எதிரான இறுதியில் வென்று தங்கப்பதக்கத்தை வென்றது.
இந்நிலையில், ஆசிய இளையோர் விளையாட்டு கபடியில் தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஜெயில் படப்பிடிப்பின்போது கண்ணகி நகர் சகோதர சகோதரிகளின் அபாரமான விளையாட்டுத் திறனை கண்டு வியந்தேன். இன்று உலகமும் வியக்கிறது.
அன்புத் தங்கை கார்த்திகா நம் தேசத்தின் பெருமை. மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிருஷ்ணகிரியில் மண்டல அளவிலான கபடி தேர்வு போட்டி நடைபெற்றது.
- கபடி போட்டியில் 4 மாவட்டங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், சேலம் மண்டல அளவில் கபடி தேர்வு போட்டி நேற்று முன்தினம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்துரை தலைமையில். 14, 17 வயது மற்றும், 19 வயதுக்குட்பட்ட 3 பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. கடந்த 1-ந் தேதி ஆண்களுக்கும், நேற்று பெண்களுக்குமான கபடி தேர்வு போட்டி நடந்தது.
இதில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கபடி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் நடந்த கபடி தேர்வு போட்டியில், 292 ஆண்களும், நேற்றைய கபடி தேர்வு போட்டியில், 172 வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளையாடும், 7 கபடி வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.






