என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில கல்வி கொள்கை"

    • தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.
    • பள்ளிக்கல்வியில் தமிழ் மொழியை முதல் மொழியாக நிலைநிறுத்துவது அவசியம்.

    சென்னை:

    மாநில கல்வி கொள்கையை உருவாக்க 2022-ல் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த ஜூலை மாதம் சமர்ப்பித்தது.

    அந்த அறிக்கையில், 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது என்றும் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றும் மாநில கல்விக்கொள்கை குழு பரிந்துரைத்தது. மேலும், நீட் தேர்வு கூடாது, நீட் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களை விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும். பள்ளிக்கல்வியில் தமிழ் மொழியை முதல் மொழியாக நிலைநிறுத்துவது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில், மாநில கல்வி கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • குழுவினர் மாநில கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை தயார் செய்து உள்ளது.
    • அரசு பள்ளிகளில் 5 வயதில்தான் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற விதி இருக்கிறது.

    சென்னை:

    மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த கல்விக் கொள்கையை வடி வமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவினர் மாநில கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை தயார் செய்து உள்ளது. இந்த குழு குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கான வயதை 5-ஆக நிர்ணயித்துள்ளது.

    3 முதல் 5 வயது வரை 'பிளே ஸ்கூலில்' தான் சேர்க்க முடியும். 1-ம் வகுப் பில் இருந்து தான் எழுத, படிக்க கற்றுக் கொடுக்கும் அடிப்படை கல்வியை தொடங்க வேண்டும். ஏற்க னவே அரசு பள்ளிகளில் 5 வயதில்தான் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற விதி இருக்கிறது.

    ஆனால் தனியார் மற்றும் நர்சரி பள்ளிகளில் 3 வயதிலேயே குழந்தைகள் சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அடிப்படையில் வைத்தே 5 வயதில்தான் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற பொதுவான விதி உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த பொதுவான வயது மட்டுமல்லாமல் 10 மற்றும் 12 மற்றும் 3 வருட பட்டப்படிப்பு வகுப்புகளில் தேர்வுகளில் மறு சீரமைப்பு, ஆசிரியர்களின் திறன் வளர்ப்பு, உடற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆகியவையும் இந்த பரிந்துரையில் இடம் பெற்றுள்ளது.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களான இளங்கலை பட்டப்படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு, மும்மொழி கொள்கையை அமுல்படுத்து வது 3,5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு, நான்கு ஆண்டு கல்லூரி பட்டப் படிப்பு ஆகியமுறைகளை நிராகரித்துவிட்டனர்.

    வருகிற 30-ந் தேதி நடைபெறும் மாநில கல்விக் கொள்கை குழு கூட்டத்தில் பரிந்துரைகள் இறுதி செய்யப்பட உள்ளது.

    ×