என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதை நெல் ரகங்கள்"

    • நெல் சாகுபடி செய்வதற்காக கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
    • புரட்டாசி பட்டத்தில் பயிரிட ஏற்ற ரக மான வம்பன் 11 என்ற ரகம் இருப்பில் உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன பகுதியில் உள்ள ஒரு லட்சத்து 3,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற ஏதுவாக நன்செய் பாசனத்தி ற்கு நெல் சாகுபடி செய்வத ற்காக கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்க ழகத்தின் கீழ் இயங்கும் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் கீ ழ்பவானி பாசனப்பகுதியில் விவசாயிகள் நெல் பயிரிடு வதற்கு தேவையான குறுகிய கால மற்றும் நீண்ட கால ரக விதை நெல் ரகங்க ள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    பவானிசாகர் வேளா ண்மை ஆராய்ச்சி நிலைய த்தில் நெல், உளுந்து, பாசி ப்பயிறு, நிலக்கடலை, மஞ்ச ள் ஆகிய பயிர்களுக்கு தேவை யான தரமான விதைகள் உற்பத்தி செய்து இப்பகுதி விவசாயிகளுக்கு குறிப்பிட்ட பருவங்களில் பயிர் செய்வத ற்காக வழங்கி வருகிறோம்.

    நெல்லில் வல்லுநர் விதை, ஆதார விதை, சான்று விதை மற்றும் உண்மை நிலை விதைகள் கோ 51, கோ 55, ஏடீடி ஆர் 45, ஏடீடி 37, ஏடீடி 51, கோ 54, பவானி, மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி போ ன்ற நெல் ரகங்களில் விதை உற்பத்தி செய்யப்படுகிறது.

    தற்போது இந்த பருவ த்திற்கு தேவையான நெல் ரகங்களான கோ 51, கோ 55, ஏடீடி ஆர் 45, ஏடீடி 51 ஆகிய கிரகங்களில் ஆதார மற்றும் சான்று நிலை விதை நெல் இருப்பில் உள்ளது.

    இதில் ஆதார விதை நெல் ஒரு கிலோ ரூ. 44-க்கும், சான்று விதை நெல் ஒரு கிலோ ரூ. 39-க்கும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேப்போல பயிர் வகை பயிர்களான புரட்டாசி பட்டத்தில் பயிரிட ஏற்ற ரக மான வம்பன் 11 என்ற ரகம் இருப்பில் உள்ளது. ஒரு கிலோ ஒன்றுக்கு ரூ. 110-க்கு விற்பனை செய்யப்படுகி றது.

    பவானிசாகர் வேளா ண்மை ஆராய்ச்சி நிலைய த்தில் தரமான நெட்டை ரக தென்னை கன்றுகள் விற்ப னை செய்யப்பட்டு வருகிற து.

    ஒரு தென்னைங்க ற்றின் விலை ரூ.75, இதை நெல் பயறு வகை விதைகள் மற்றும் தென்னங்கன்றுகள் தேவைப்படும் பூசைகள் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் அலுவலக வேலை நாட்களி ல் நேரடியாக வந்து பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×