என் மலர்
நீங்கள் தேடியது "கோவில் பொங்கல் திருவிழா"
- வெள்ளைப்பாறை முனியப்பசாமி திருக்கோவில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி ஒன்றியம் 46 புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட நொச்சிக்காட்டுவலசு பகுதியில் இந்து சமய அறநிலையத்து றைக்கு சொந்தமான அருள்மிகு வெள்ளைப்பாறை முனியப்பசாமி திருக்கோவில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு கரகம் எடுத்தல், காவிரியில் தீர்த்தம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், பெருபூஜை செய்த நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைதொடர்ந்து இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதையடுத்து இன்று மாலை மறுபூஜை செய்வதுடன் பொங்கல் திருவிழா நிறைவு பெற உள்ளது.






