என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மளிகை கடையில் திருட்டு"

    • சம்பவத்தன்று மளிகை கடையில் புகுந்து ரூ.32 ஆயிரத்தை ஜெயராமன் திருடிச் சென்றார்.
    • வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திக் பணம் திருடிய ஜெயராமனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சவரி மனைவி சுதா. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அதன் அருேக பொன்ராஜ் என்பவர் வீடு கட்டி வருகிறார். இந்த வீடு கட்டிட பணிகளுக்காக மதுரை செல்லூரைச் சேர்ந்த ஜெயராமன் (25) என்பவரை அழைத்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று சுதாவின் மளிகை கடையில் புகுந்து ரூ.32 ஆயிரத்தை ஜெயராமன் திருடிச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் கொடைக்கானல் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு கொடைக்கானல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திக் பணம் திருடிய ஜெயராமனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    • இரவு கடைக்கு வெளியில் இருந்த 3 உப்பு மூடைகளை மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் வைத்து எடுத்துச்சென்றனர்.
    • தொடர் திருட்டு நடைபெறுவதால் போலீசார் இரவு நேர ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் ரெயில்நிலையம் செல்லும் சாலையில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் அன்பு. தினமும் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிடுவது வழக்கம். கடையில் உள்ள சில பொருட்களை வெளியில் வைத்துவிட்டு சென்றுவிடு வார். அதன்படி நேற்று முன்தினம் இரவு கடைக்கு வெளியில் இருந்த 3 உப்பு மூடைகளை மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் வைத்து எடுத்துச்சென்றனர்.

    மறுநாள் காலையில் வந்த கடை உரிமையாளர் உப்புமூடை திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காமிராக்கள் பதிவை கொண்டு சோதனை நடத்தியதில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் உப்பு மூடைகளை திருடிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அதனை சமூகவலை தளங்களில் வெளியிட்டு ள்ளனர். இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை பொதுமக்களே பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மளிகைகடையில் அரிசி மூட்டைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்தும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியான நிலையிலும் இதுவரை யாரும் பிடிபடவில்லை. வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் இரவு நேர கொள்ளை சம்பவங்களால் பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்து ள்ளனர். பெரும்பாலும் போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பதில்லை என்பதால் அவர்களும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர்.

    எனவே போலீசார் இரவு நேர ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    ×