என் மலர்
நீங்கள் தேடியது "தவறி விழுந்து சிறுவன் சாவு"
- துரைசாமிபுரத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் காளியம்மன் கோவில் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த யுவராஜ் திடீரென மாயமானார்.
- சிறுவனை மீட்டு நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே துரைசாமிபுரத்தை சேர்ந்த இளங்கோ மகன் யுவராஜ் (வயது4). காளியம்மன் கோவில் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த யுவராஜ் திடீரென மாயமானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை தேடினர். அப்பகுதியில்இருந்த கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்கேத்தில் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர்.
அப்போது அங்கு பேச்சுமூச்சின்றி யுவராஜ் இருந்தான். சிறுவனை மீட்டு நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் யுவராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் சாலையோர ஆற்றுபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
- இதில் டிராக்டரில் உட்கார்ந்து வந்த சிறுவன் கீழே விழுந்து பலத்த காயமடைந்தான்.
நத்தம்:
நத்தம் அருகே பட்டணம்பட்டியை சேர்ந்தவர் அழகன். (வயது40) கொத்தனார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அழகனின் 3-வது மகன் கர்ணன் (8) தனது சகோதரருடன் டிராக்டரில் சென்றார். மோட்டார்சைக்கிள் பெட்ரோல் இல்லாமல் இருந்ததை டிராக்டரில் கட்டி இழுத்து சென்றனர்.
எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் சாலையோர ஆற்றுபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரில் உட்கார்ந்து வந்த சிறுவன் கர்ணன் கீழே விழுந்து பலத்த காயமடைந்தான்.
ஆபத்தான நிலையில் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






