நத்தம் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து சிறுவன் சாவு

எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் சாலையோர ஆற்றுபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுஇதில் டிராக்டரில் உட்கார்ந்து வந்த சிறுவன் கீழே விழுந்து பலத்த காயமடைந்தான்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

நத்தம்:

நத்தம் அருகே பட்டணம்பட்டியை சேர்ந்தவர் அழகன். (வயது40) கொத்தனார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அழகனின் 3-வது மகன் கர்ணன் (8) தனது சகோதரருடன் டிராக்டரில் சென்றார். மோட்டார்சைக்கிள் பெட்ரோல் இல்லாமல் இருந்ததை டிராக்டரில் கட்டி இழுத்து சென்றனர்.

எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் சாலையோர ஆற்றுபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரில் உட்கார்ந்து வந்த சிறுவன் கர்ணன் கீழே விழுந்து பலத்த காயமடைந்தான்.

ஆபத்தான நிலையில் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com