என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சு மூட்டை"

    • பஞ்சுகள் என்பதால் தீ கொளுந்து விட்டு எரிந்தது.
    • ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்குளி:

    ஹரியானாவில் இருந்து பஞ்சு மூட்டைகளை ஏற்றி க்கொண்டு திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி செங்கப்பள்ளியை நோக்கி இன்று காலை கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது.

    ஊத்துக்குளி-செங்கப்பள்ளி பிரிவு அருகே செல்லும் போது திடீரென லாரியில் இருந்து கரும்புகை வெளியேறியது. உடனே டிரைவர் கீழே இறங்கி பார்ப்பதற்குள் லாரியில் இருந்த பஞ்சு மூட்டைகளில் தீ பற்றி எரிந்தது. பஞ்சுகள் என்பதால் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

    உடனே இது குறித்து ஊத்துக்குளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் தீயில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமாகின. லாரியின் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீயால் இந்த விபத்து நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×