என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வகுப்புகள் தொடங்கியது"

    • மாணவ-மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
    • கல்லூரிகளில் முதுகலை படிப்புகளும் கற்றுத்தரப்பட்டு வருகின்றன.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் கோவை, தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய பகுதி களில் அரசு கலைக்கல்லூரி கள் இயங்கி வருகின்றன. புலியகுளத்தில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி உள்ளது.

    இங்கு இளநிலை படிப்பு களான பி.ஏ தமிழ், ஆங்கி லம், வரலாறு, பி.காம், பி.எஸ்சி வேதியியல், இயற்பி யல், கணிதம் உள்பட 23 துறைகள் உள்ளன. இதுதவிர மேற்கண்ட கல்லூரிகளில் முதுகலை படிப்புகளும் கற்றுத்த ரப்பட்டு வருகின்றன.

    கோவை அரசு கலைக்க ல்லூரியில் இளநிலை படிப்பு களுக்காக 1626 இடங்கள் காலியாக இருந்தன.

    எனவே அங்கு இனசுழற்சி மற்றும் கலந்தாய்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த ப்பட்டது. இதன்வாயிலாக 1494 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் கோவை அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ ர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கும் என்று கல்லூரி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    முன்னதாக கல்லூரிக்கு வரும் மாணவ- மாணவி கள் நாகரீகமாக ஆடை அணிய வேண்டும். கால்கள் தெரியும் வகையில் அரை க்கால் பேண்ட் அணிந்து வரக்கூடாது என்பவை உள்ளிட்ட பல்வேறு கட்டு ப்பாடுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. அதன்படி மாணவ மாணவிகள் நவநாகரீகமாக உடை அணிந்து வந்திருந்தனர்.

    அவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு தரப்பட்டது. அடுத்தபடியாக சீனியர் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் ஜூனியர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

    கோவை அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ ர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடந்து வருகிறது. இங்கு காலை 9 மணி முதல் 1.45 மணி வரையும், மதியம் 1.45 மணி முதல் மாலை 6 மணிவரை இரண்டு ஷிப்டு களாக வகுப்புகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே கல்லூரி க்கு புதிதாக வரும் ஜூனியர் மாணவர்களை ராக்கிங் செய்யக்கூடாது என்று சீனியர் மாணவர்களுக்கு நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

    இதனை கண்காணிக்கும் வகையில் பேராசிரியர்கள் அடங்கிய ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கல்லூரி வளா கத்தில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுதவிர கல்லூரி வகுப்பறை மற்றும் வளாகத்தில், ராக்கிங் புகார் செய்வதற்காக, புகார் பெட்டிகளும் வைக்கப்பட்டு உள்ளன.

    கோவை அரசு கலைக்க ல்லூரியில் மேலும் 132 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை வராண்டா கவுன்சிலிங் மூலம் நிரப்புவது என்று கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை வருகிற 7-ந்தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    எனவே கோவை அரசு கலைக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் வராண்டா கவுன்சிலிங்கில் பங்கேற்று பயன்பெறலாம் என்று கல்லூரி நிர்வாகம் தற்போது அறிவித்து உள்ளது.

    ×