என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபத்தான சாலை"

    • 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • அதிவேகமாக வரும் வாகனங்களால் மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறுகிறது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மாநில நெடுஞ்சாலை ஒட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், சாலையின் எதிர் திசையில் உள்ள அண்ணா துவக்கப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

    தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளியை விட்டு வீடு திரும்பும் மாணவ-மாணவியர், ஆபத்தான நிலையில் மாநில நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களால் மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறுகிறது. பள்ளி மாணவ, மாணவிகள் சாலையை கடக்கும் போது பெரும் அச்சத்துடன் கடக்க வேண்டிய சூழல் உள்ளது.

    பள்ளி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் அல்லது அதிவேகத்தில் வரும் வாகங்களை கட்டுப்படுத்த எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளாமல் மெத்தன போக்கை கடைபிடித்து வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது .

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பள்ளியின் அருகே உள்ள சாலையில் வேகதடை ஏதும் இல்லாததால், இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் வேகமாக செல்கின்றன.
    • மாணவர்கள் மீது மோதி சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பேரிகை- தீர்த்தம் நெடுஞ்சாலையில் அமைந்த அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.

    இந்த பள்ளில் பேரிகை சுற்றுவட்டார பகுதியான பேரிகை, பி.குருபரப்பள்ளி, பண்ணப்பள்ளி, கே.என்.தொட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 1400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    பள்ளியில் போதிய அளவுக்கு வகுப்பறைகள் இருப்பதாகவும், போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால், மாணவர்கள் ஆபத்தான நிலையில் சாலையை கடந்து சிறுநீர் கழிக்க சென்று வருகின்றனர்.

    இதனால் அந்த சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களில் சிக்கி பள்ளி மாணவர்கள் காயமடைந்து வருகின்றனர்.

    மேலும், பள்ளியின் அருகே உள்ள சாலையில் வேகதடை ஏதும் இல்லாததால், இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதில் மாணவர்கள் மீது மோதி சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே, மாவட்ட நிர்வாகம் பள்ளி வளாகத்திற்குள்ளேயே நவீன முறையில் கழிப்பறை கட்டி கொடுக்க வேண்டும் என்றும், பள்ளி அருகே உள்ள சாலையில் ஒரு வேகதடையை அமைக்க வேண் டும் என்றும், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    ×