என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏரி நீரை வெளியேற்றம்"

    • டிராக்டர் கொண்டு 10 இன்ச் பைப் மூலம் ஏரியிலுள்ள நீரை வெளியேற்றி வருகிறார்.
    • ஏரி நீரை வெளியேற்றி வருவது அப்பகுதி விவசாயிகளை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த திருவணப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட திருவணப்பட்டி பூங்காநகர் ஏரி சுமார 26.57 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் வருடந்தோரும் மீன்பிடி ஏலம் நடத்தப்பட்டு, அதன்மூலம் ஒப்பந்ததாரர் மீன்பிடித்து வருவது வழக்கம்.

    இந்நிலையில் சின்னகாமாட்சிபட்டி கிராமத்தை சேர்ந்த தீர்த்தகிரி என்பவர் இந்த ஆண்டு மீன்பிடி ஏலம் எடுத்துள்ளார். ஒப்பந்தகாலம் முடிவடைந்து வரும் நிலையில், ஒப்பந்ததாரர் தீர்த்தகிரி ஏரியில் உள்ள மீன்கள் முழுவதையும் பிடிப்பதற்காக, கடந்த இரண்டு நாட்களாக டிராக்டர் கொண்டு 10 இன்ச் பைப் மூலம் ஏரியிலுள்ள நீரை வெளியேற்றி வருகிறார். இந்த ஏரி மூலம் 1000த்திற்கும் மேற்பட்ட விவசாய நிலம் பாசன வசதி பெறுவதுடன், சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில் மீன்பிடி ஒப்பந்ததாரர் தன்னிச்சையாக எவ்வித அனுமதியும் பெறாமல் ஏரி நீரை வெளியேற்றி வருவது அப்பகுதியில் உள்ள விவசாயிகளை மற்றும் பொதுமக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.

    இதுகுறித்து ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமலைராஜனிடம் கேட்டபோது, தற்போது ஜமாபந்தி நடப்பதால் கிராம நிர்வாக அலுவலரை நேரில் அனுப்பி விசாரித்து, அவரிடமிருந்து புகார் மனு பெற்று ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    • ஏரியில் மீன் பிடிப்பதற்காக தனி நபர் ஒருவர் சட்ட விரோதமாக ஏரியிலிருக்கும் தண்ணீரை ராட்சத மி்ன் மோட்டார் வைத்து வெளியேற்றி வருகிறார்.
    • இது போன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் சம்மந்தப் பட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பந்தாரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கரகப்பட்டி பெரிய ஏரியில் மீன் பிடிப்பதற்காக தனி நபர் ஒருவர் சட்ட விரோதமாக ஏரியிலிருக்கும் தண்ணீரை ராட்சத மி்ன் மோட்டார் வைத்து வெளியேற்றி வருகிறார்.

    எந்த ஒரு அரசு அதிகாரியின் உத்தரவையும் பெறாமல் இவ்வாறு செய்து வருவதால் ஏரி நீரை ஆதாரமாக கொண்டு விவசாயம் செய்து வரும் 300 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்ப–டும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தனிநபர் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, ஏரி நீரை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தங்களின் வாழ்வாதராமாக உள்ள கரகப்பட்டி பெரிய ஏரி நீர் ஆதாரத்தை காக்க வேண்டும். இதற்கு தருமபுரி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் ஒட்டப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி கூறியதாவது:-

    தனிப்பட்ட ஒருவரின் சுயநலத்திற்காக நீர் நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்தினால் அது கிராமத்தினுடைய விவசாயத்தை, கால்நடை வளர்ப்பை பாதிக்கும்.

    இது போன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் சம்மந்தப் பட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அப்போது தான் இயற்கை வளத்தை காப்பாற்றிட முடியும். கரகம்பட்டியில் உள்ள பெரிய ஏரியில் மீன் பிடிப்பதற்காக தனி நபர் ஒருவர் நீரை வீணாக வெளியேற்றுவதை தருமபுரி மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், விவசாயிகளை ஒன்று திரட்டி, ஆர்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.

    ×