என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நர்மதா"

    • தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு'.
    • இந்த நிகழ்ச்சியில் திருவாரூரை சேர்ந்த நர்மதா என்பவர் போட்டியாளராக இருக்கிறார்.

    தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் திருவாரூரை சேர்ந்த நர்மதா என்பவர் 'இட ஒதுக்கீடு எனது உரிமை' என்ற தலைப்பில் இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். இவரின் உரையை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அதில், "சொற்களுக்கு உயிர் இருக்கிறது. இனமான-பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் வல்லமை கொண்டது பேச்சுக்கலை. அதனால்தான் "தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு" நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி தொடங்கும்போது, "பேச்சுக்கலை என்பது பழைய மூடநம்பிக்கைகளைப் பாடி, பிற்போக்குத்தனத்தைப் போற்றுவதற்குப் பயன்படக் கூடாது.


    நர்மதா

    நகைச்சுவை என்ற பெயரில் அடுத்தவரை மட்டம் தட்டுவதாக இருக்கக் கூடாது. பகுத்தறிவையும், அறவுணர்வையும் வளர்த்து, முற்போக்கான சமூகத்துக்கு வழிவகுப்பதுதான் சிறந்த பேச்சுக்கு இலக்கணம்! பயனற்றவற்றைத் தவிர்த்து, பகுத்தறிவை வளர்க்கும் நோக்கத்தை இந்த நிகழ்ச்சி பின்பற்றும் என்று நான் மனதார நம்புகிறேன்" என வாழ்த்தினேன்.

    எனது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் "இடஒதுக்கீடு எனது உரிமை" என்ற தலைப்பில் உரையாற்றிய நர்மதாவின் உரை அமைந்திருந்தது. கருத்து செறிந்த அவரது உரை வீச்சில் நூற்றாண்டுகால இடை வெளியைச் சுட்டிக்காட்டிய அவரது சொற்களுக்கு உயிர் இருக்கிறது. என் திருவாரூர் மண் ஈன்றெடுத்த அவரை வாழ்த்துகிறேன்! அனைவரும் சொல்வோம்-இடஒதுக்கீடு நமது உரிமை!" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


    ×