என் மலர்
நீங்கள் தேடியது "கோடைக்கால பயிற்சி"
- 15 நாட்கள் ஆண், பெண் இருவருக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுனர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
- விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் என 305 வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் நடந்தது.
இதில், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, தேக்வாண்டோ, ஜுடோ ஆகிய விளையாட்டுகளுக்கு கடந்த 2-ந் தேதி முதல் நேற்று வரை 15 நாட்கள் ஆண், பெண் இருவருக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுனர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த முகாமில், பள்ளி மாணவ, மாணவிகள், வீளையாட்டு வீரர், வீராங்கனைகள், உலகத்திறனாய்வு தடகள போட்டிகள், பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இதர விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் என 305 வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றனர்.
முகாமின் நிறைவு நாளான நேற்று காலை பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பர்கூர் டி.எஸ்.பி., மனோகரன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். முன்னதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஸ்குமார் வரவேற்றார்.
இதில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுனர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.
- கடைவீதி, விருபாட்சிபுரம், போன்ற பகுதியிலிருந்து 300 மாணவ மாணவிகள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
- பயிற்சி நிறைவு விழாவான நேற்று மாணவ மாணவிகளுக்கு சான்றுகள் வழங்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில், தனியார் மண்டபம் அருகே உள்ள நகராட்சி தொகுப்பு பள்ளியில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை ஜவகர் சிறுவர் மன்றம் சிறார்களுக்கான இலவசமாக கோடை கால பயிற்சி நடைபெற்றது.
இதில் சிலம்பாட்டம், ஓவியம், பரதநாட்டியம் உள்ளிட்ட கோடைகால பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டது. இதில் குமாரசாமிபேட்டை, காந்திநகர், எம்ஜிஆர் நகர், அப்பா நகர், அண்ணா நகர், கடைவீதி, விருபாட்சிபுரம், போன்ற பகுதியிலிருந்து 300 மாணவ மாணவிகள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
பயிற்சி நிறைவு விழாவான நேற்று மாணவ மாணவிகளுக்கு சான்றுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிலம்பம் ஆசிரியர் ராஜா வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன், இசக்கி ஓவிய ஆசிரியர் சண்முகம் வாழ்த்துரை வழங்கினார். மேலும் ஆசிரியர்கள் மாணவ, மாணவர்களுக்கு கலந்துகொண்டனர். நிகழ்சியின் இறுதியில் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.






