என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான  கோடைக்கால பயிற்சி முகாம்
    X

    கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம்

    • 15 நாட்கள் ஆண், பெண் இருவருக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுனர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் என 305 வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் நடந்தது.

    இதில், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, தேக்வாண்டோ, ஜுடோ ஆகிய விளையாட்டுகளுக்கு கடந்த 2-ந் தேதி முதல் நேற்று வரை 15 நாட்கள் ஆண், பெண் இருவருக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுனர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த முகாமில், பள்ளி மாணவ, மாணவிகள், வீளையாட்டு வீரர், வீராங்கனைகள், உலகத்திறனாய்வு தடகள போட்டிகள், பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இதர விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் என 305 வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றனர்.

    முகாமின் நிறைவு நாளான நேற்று காலை பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பர்கூர் டி.எஸ்.பி., மனோகரன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். முன்னதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஸ்குமார் வரவேற்றார்.

    இதில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுனர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×