என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலவளத்"

    • விவசாய பண்ணை பகுதிகளில் நேரில் சென்று தள ஆய்வு செய்தனர்.
    • விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

    அம்மாப்பேட்டை:

    தமிழ்நாடு அரசு உலக வங்கி திட்டத்தில் நீர்வள, நிலவளத் திட்டம் பகுதி 1 மற்றும் பகுதி 2 மூலம் தமிழ்நாட்டில் உள்ள 47 ஆறுகளின் உபவடிநிலப் பகுதிகளை மேம்பாடு செய்ய உலக வங்கியின் 70 சதவீத பங்களிப்பு தொகை ரூ.2,962 கோடி மற்றும் தமிழ்நாடு அரசின் 30 சதவீத பங்களிப்பு தொகை ரூ.888.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    நீர்வள, நிலவளத்திட்டம் 1 மற்றும் 2 பகுதிகள் மூலம் சேலம், தர்மபுரி, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட ங்களில் நீர்வளத்துறை, வேளா ண்துறை,

    தோட்டக்க லைத்துறை, வேளாண்பொறி யியல்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, மீன்வள த்துறை சார்ந்த துறைகள் மூலம் ரூ.128.16 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் செயல்படு த்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் பகுதி 2-ல் சேலம், ஈரோடு, தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மேட்டூர், நொய்யல், திருமணிமுத்தாறு, காவேரிப்பட்டணம் ஆகிய உபவடிநில பகுதிகளில் 103 குளங்கள், 96 அணை க்கட்டுகள் மற்றும் 3 கால்வாய்கள் 119.26 கி.மீ. மேம்படுத்தப்பட்டு 27,757.61 ஹெக்டேர் நிலங்கள் பயன்பெறுகிறது.

    இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்ட பணிகளை நீர்வள மேலா ண்மை நிபுணர் மற்றும் இணை பணிக் குழுத் தலைவர் ஜோப், முதன்மை சமூக மேம்பாட்டு நிபுணர் வருண்சிங் ஆகியோர் நெரிஞ்சிப்பேட்டையில் உள்ள மேட்டூர் மேற்குக்கரை கால்வாய், மயிலம்பாடி கிராமத்தில் உள்ள விவசாயப் பண்ணை, சங்கரகவுண்ட ன்பாளையம் விவசாயப் பண்ணை ஆகிய பகுதிகளில் நேரில் சென்று தள ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது நீர்வள மேலாண்மை நிபுணர் கே.சந்திரசேகரன், வேளாண் பொறியியல் துறை நிபுணர் சுற்றுச்சூழல் நிபுணர் ஜுதித் டிசில்வா, சிறப்பு கட்ட மைப்பு நிபுணர் ஜி.விஜிய ராம்,

    பொறியாளர் ஆர்.ராமன், நீர்வளத்துறை, மேல்காவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.அன்பழகன், மேட்டூர் அணைக்கோட்ட செயற்பொறியாளர் பி.சிவக்குமார்,

    கோவை சுற்றுச்சுழல் கோட்ட செயற்பொறியாளர் வி.ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். ஆய்வின் போது இத்திட்டதை குறித்து விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

    ×