என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுப்பு எடுத்து போராட்டம்"

    • புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனை வருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சேலம்:

    புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனை வருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் இன்று நடந்தது.

    இதையடுத்து கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

    இதனை தொடர்ந்து மாவட்டத் துணைத் தலைவர் சண்முகம் கூறும் போது, தமிழக அரசு எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றா மல் உள்ளது. தேர்தல் வாக்குறு திகளாக அறிவித்துவிட்டு இதுவரை நிறைவேற்றவில்லை . எனவே உடனடியாக அரசு நிறைவேற்றாவிட்டால் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி சென்னையில் அனைத்து அரசு ஊழியர்களும் ஒன்று திரண்டு பெருந்திறள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார் .

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வருவாய் அலுவலக சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தநாரி, மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரசு ஊழியர்க ளின் இந்த போராட்டத்தால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    • ஊராட்சி செயலாளர்களுக்கு பணிவிதிகளை காலதாமதமின்றி வெளியிடுவதோடு விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும்.
    • ஊரக வேலை உறுதி திட்ட கணிணி உதவியாளர்களின் பணி வரன்முறை ஆணைகளை வெளியிட வேண்டும்.

    சேலம்:

    ஊராட்சி செயலாளர்க ளுக்கு பணிவிதிகளை காலதாமதமின்றி வெளியிடுவதோடு விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதி திட்ட கணிணி உதவியாளர்களின் பணி வரன்முறை ஆணைகளை வெளியிட வேண்டும். அவர்கள் அனைவருக்கும் உயர்த்தப்பட்ட விகிதத்தில் ஊதியத்தை நிர்ணயம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் இன்று விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்த்துறை அலுவலர்கள் இன்று பணிக்கு செல்லவில்லை. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஒன்றிய அலுவலகங்கள் உள்ளிட்ட ஊரக வளர்ச்சி அலுவலகங்களில் இளநிலை உதவியாளர்கள் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரை அலுவலர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

    பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர். இதன் காரணமாக கிராமப்பகுதி யில் உள்ள குடிநீர்பணிகள், துப்புரவுபணிகள், வளர்ச்சித்திட்டப்பணிகள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் ஆகிய பணிகள் பாதிக்கப்பட்டது.

    ×