என் மலர்
உள்ளூர் செய்திகள்
சேலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
- புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனை வருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம்:
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனை வருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் இன்று நடந்தது.
இதையடுத்து கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதனை தொடர்ந்து மாவட்டத் துணைத் தலைவர் சண்முகம் கூறும் போது, தமிழக அரசு எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றா மல் உள்ளது. தேர்தல் வாக்குறு திகளாக அறிவித்துவிட்டு இதுவரை நிறைவேற்றவில்லை . எனவே உடனடியாக அரசு நிறைவேற்றாவிட்டால் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி சென்னையில் அனைத்து அரசு ஊழியர்களும் ஒன்று திரண்டு பெருந்திறள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார் .
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வருவாய் அலுவலக சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தநாரி, மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரசு ஊழியர்க ளின் இந்த போராட்டத்தால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.








