என் மலர்
நீங்கள் தேடியது "விறகுகளை காணிக்கையாக"
- பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது.
- பக்தர்கள் விறகுகளை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.
அந்தியூர்:
அந்தியூர் பத்ரகாளி யம்மன் கோவில் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்து வருகிறது.
இதையொட்டி தினமும் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து அம்மனை வழிபடுகிறார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக குண்டம் விழா அடுத்த மாதம் 5-ந் தேதி நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 4 நாட்கள் தேர் திரு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
இந்நிலையில் கோவி லுக்கு வரும் பக்தர்கள் குண்டம் திருவிழாவிற்காக நேர்த்திக்கடனாக விறகுகளை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். பக்தர்கள் வழங்கும் விறகுகள் குண்டம் தயார் செய்யும் இடத்தில் குவிந்து வருகிறது.
நேர்த்திக்கடன் செலு த்தும் விறகுகள், ஒரு கட்டு 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பக்தர்கள் விறகுகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.






