என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயில் உயிருடன் மீட்பு"

    • 50 அடி ஆழ தண்ணீர் உள்ள கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்து விட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் கயிற்றை பயன்படுத்தி மயிலை உயிருடன் மீட்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே பசுவபட்டி ஊத்துக்காடு என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான சுமார் 50 அடி ஆழ தண்ணீர் உள்ள கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்து விட்டது.

    இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    அதைத்தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் முத்துசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கயிற்றை பயன்படுத்தி கிணற்றுக்குள் இறங்கி தண்ணீரில் தத்தளித்த மயிலை உயிருடன் மீட்டனர்.

    பின்னர் அந்த மயிலை வனத்துறை அலுவலர் சத்தியமூர்த்தியிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர்.

    • 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் நேற்று மயில் ஒன்று தவறி விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது
    • 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

    ஏரியூர்,

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள சின்னத்தலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பு. இவரது மகன் பிரவீன் குமார்.

    இவருக்கு சொந்தமான 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் நேற்று மயில் ஒன்று தவறி விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது.

    இதனைக் கண்ட அவர் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் அவசர எண்ணிற்கு தகவல் தெரிவித்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில்,சிறப்பு நிலைய அலுவலர் முரளி,தீ யணைப்பு ஓட்டி சிதம்பரம், தீயணைப்போர்கள் ராஜி, கேப்டன்ராஜ், கார்த்திக் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

    பின்னர் விவசாய கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மயிலை பென்னாகரம் வனத்துறை ஊழியர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

    ×