என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிட்னி விற்பனை"

    • இடைத்தரகர்கள், சிறுநீரத்திற்கு 5 முதல் 10 லட்சம் வரை வழங்கி அவர்களை ஒப்புக்கொள்ள செய்கின்றனர்.
    • தமிழக அரசு இந்த விவகாரத்தில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    மதுரை:

    பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன் மதுரை ஐகோர்ட்டு அமர்வில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ள சட்டவிரோத சிறுநீரக விற்பனை மோசடி மிகவும் தீவிரமானது.

    பள்ளிப்பாளையத்தில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் சாய ஆலைகளில் வேலை செய்யும் ஏழைத் தொழிலாளர்களை தரகர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பால் சுரண்டப்பட்டு, சிறுநீரக தானம் செய்பவர்களாக சட்டவிரோதமாகப் பயன்படுத்தி உள்ளனர்.

    இடைத்தரகர்கள், சிறுநீரத்திற்கு 5 முதல் 10 லட்சம் வரை வழங்கி அவர்களை ஒப்புக்கொள்ள செய்கின்றனர். இது 1994 மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை சட்டத்திற்கு எதிரானது. ஆனால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    மேலும் இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினரின் தொடர்பு உள்ளதால் இந்த வழக்கை மாநில காவல்துறை விசாரணை செய்தால் விசாரணை நேர்மையாக இருக்காது, எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள் முருகன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், ஏன் இதுவரை குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வில்லை? என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அரசு தரப்பில், "இது போன்ற வழக்குகளில் புகார் அளிக்கப்பட்டால் மட்டுமே குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என நீதிமன்ற உத்தரவு உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

    அதற்கு நீதிபதிகள், "இந்த வழக்கில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அது தெரியவந்த பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். வழக்கு பதிவு செய்வதில் உரிய வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட வேண்டும்" என குறிப்பிட்டனர்.

    தொடர்ந்து, "பள்ளிப்பாளையம் கிட்னி விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உடனடியாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டனர். தொடர்ந்து, ஐ.பி.எஸ். அலுவலர் தலைமையில், சிறப்பு விசாரணை குழுவை அமைப்பது தொடர்பாக டி.ஜி.பி.யிடம் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்தனர்.

    • இந்த போஸ்டர் தற்போது, லிங்கிடுஇன், டுவிட்டர் என சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    • நெட்டிசன்கள் இந்த போஸ்டரை கண்டு வியப்புடன் கமென்ட் செய்து வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம், பெங்களூருவில் போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், தனது இடது சிறுநீரகம் விற்பனைக்கு உள்ளது என்றும், நில உரிமையாளர்கள் கேட்கும் அட்வான்ஸ் கொடுக்க பணம் தேவை என்றும், விளம்பரதாரரின் சுயவிவரத்தை அணுக நில உரிமையாளர்கள் ஸ்கேன் செய்யக்கூடிய க்யூஆர் (QR) குறியீடு ஆகியவை குறிப்பிட்டு போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த போஸ்டரை முழுமையாக, படித்தபோது அது உண்மையாக கிட்னி விற்பனைக்கானது அல்ல.. நகைச்சுவைக்காக.. அதிகளவில் வாடகை, அட்வான்ஸ் வசூல் செய்யும் வீட்டு உரிமையாளர்களை நெக்கலடிக்க ஒட்டப்பட்ட விளம்பர போஸ்டர் என்பது பின்னர் தெரியவந்தது.

    நபர் ஒருவர், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள இந்திரா நகரில் வாடகைக்கு வீடு தேடி வருவதும், ஆனால் வீட்டின் உரிமையாளர்கள் அதிகளவில் அட்வான்ஸ் தொகை கேட்பதும், அதற்கு ஒரே வழி தனது கிட்னியை விற்பதுதான் என்றும் கிண்டல் செய்யும் விதமாக போஸ்டர் மூலம் தெளிவுப்படுத்துகிறார்.

    இந்த போஸ்டரை, ரம்யாக் ஜெயின் என்பவர் சமூக வலைத்தளத்தில் பெங்களூரு இந்திரா நகர் பகுதியில் வாடகைக்கு வீடு குடியேற உள்ள சிரமங்களைக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

    இந்த போஸ்டர் தற்போது, லிங்கிடுஇன், டுவிட்டர் என சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இந்த போஸ்டரை கண்டு வியப்புடன் நசைக்சுவையாக கமென்ட் செய்து வருகின்றனர்.

    ×