என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருத்திகை விழா"

    • மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது
    • பக்தர்களுக்கு அன்னதானம்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு மூலவர் சுப்பிரமணிய சாமி வள்ளி தெய்வானை சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து மாலை உற்சவ மூர்த்தியான சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.மங்கள வாத்தியங்களுடன் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    வேடந்தாங்கல், கர்ணாஊர், மகேந்திரவாடி, பானாவரம், புதூர், வீராணம், புதுபட்டு, மேல் வீராணம், மங்கலம், பொன்னப்பன் தாங்கள், கன்னிகாபுரம், கூத்தபம்பாக்கம், வடல்வாடி, குப்பகல்மோடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் கிரிவலத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினர்.

    • பறக்கும் காவடி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அருகே மூலைகேட் பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரமுடைய வேலாடும் தணிகைமலை பாலமுருகன் கோவிலில் கிருத்திகை பெருவிழா நடைப்பெற்றது.

    வள்ளி தெய்வானை அம்பாள்களுடன் முருகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார்.

    பக்தர்கள் கூட்டம் வந்தவண்ணம் இருந்தது. பாலமுருகன் சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வள்ளி தெய்வானை அம்பாளை அழைத்து வந்து பந்தல் மண்டபம் முகப்பில் வைத்து வழிப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதில் மருதவல்லிப்பாளையம் முதல் வேலாடும் தனிகைமலை வரை சுமார் 5 கி.மீ தூரம் நேர்த்திக்கடனாக பறக்கும் காவடிகள் ஏந்தி முதுகில் அழகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    ×