என் மலர்
நீங்கள் தேடியது "கடைசிவெள்ளி"
- இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் திரண்டனர்.
- பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சாத்தார்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
தை மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் அம்மனுக்கு பால், பன்னீர், திருமஞ்சனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் போன்ற 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடனாக தீச்சட்டி, அங்கப்பிரதட்சணம், பால்குடம், ஆயிரம் கண் பானை, கரும்பு தொட்டி, மாவிளக்கு எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தை கடைசி வெள்ளி யை முன்னிட்டு தென்காசி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் பாதயாத்திரையாக அதிக அளவிலான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். சங்கரன்கோவில், திருவேங்கடம், தூத்துக்குடி, விளாத்தி குளம், கோவில் பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து அதிக அளவிலான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். இதில் பெண்கள் அதிக அளவில் சங்கரன்கோவில், திருவேட்டநல்லூர், சுரண்டை ஆகிய இடங்க ளில் இருந்து அம்மன் பாடல்களை பாடியவாறு பாதயாத்திரையாக வந்து இருக்கன்குடி மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
இதையொட்டி பக்தர்களுக்கு கழிப்பறை வசதி, குடிநீர் தொட்டி, மருத்துவ வசதி, ஆகியவை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.






