என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிக மது போதையில்"

    • சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த ஆனந்த் சாப்பிட்டு விட்டு மீண்டும் மது அருந்தியுள்ளார்.
    • ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரி நகர், பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (25). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. மது அருந்தும் பழக்கம் உடையவர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த ஆனந்த் சாப்பிட்டு விட்டு மீண்டும் மது அருந்தியுள்ளார். பின்னர் நள்ளிரவில் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார்.

    இதனால் மயக்கமடைந்த ஆனந்தை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆனந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×