என் மலர்
நீங்கள் தேடியது "இறைச்சிக்கடை தொழிலாளி"
- மனமுடைந்த மணி அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை டவுன், அம்மாபாளையம் செங்கோட கவுண்டர் வீதியில் வசிப்பவர் மணி (வயது 35). இவர் சென்னிமலை-அரச்சலூர் ரோட்டில் அண்ணமார் தியேட்டர் அருகே இறைச்சிக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இங்கு வந்து தங்கி கறிக்கடையில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி உள்ளார். ஆனால் மனைவியுடன் வாழாமல் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
பின்னர் ஊட்டியை சேர்ந்த திவ்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் குடும்பம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் திவ்யாவுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக அவர் ஊருக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த மணி அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த சென்னிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணி உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






