என் மலர்
நீங்கள் தேடியது "ஊராட்சி குழு கூட்டம்"
- காட்டு யானைகள் சேதாரம் செய்யாத வண்ணம் மின்வேலி அமைத்து தர வேண்டும்.
- சிறப்பு முகாம் அமைத்து நோய்க்கான தடுப்பூசியினை வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் மாவட்ட ஊராட்சி குழுவின் சாதாரணக் கூட்டம், மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மலையோர கிராம மக்களின் விசவசய பயிர்களை காட்டு யானைகள் சேதாரம் செய்யாத வண்ணம் மின்வேலி அமைத்து தர வேண்டும்.
காட்டு யானை தாக்கி இறந்த நபர்களின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்குவதை உயர்த்தி வழங்கிட வேண்டும். கிராமப்புற மக்கள் வளர்க்கும் கால்நடைகளை கோமாரி நோய் தாக்காதவாறு சிறப்பு முகாம் அமைத்து நோய்க்கான தடுப்பூசியினை வழங்க வேண்டும்.
ஓசூர் மற்றும் கெலமங்கலம் பகுதிகளில் செயல்பட்டு வரும் டாடா கம்பெனியில் வேலைக்கு ஆட்கள் தேர்ந்தெடுப்பதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த படித்த ஆண், பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி, பணி நியமனம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், மாவட்ட ஊராட்சி குழு அலுவலக செயலர் சாந்தா, உதவியாளர் சத்தியவதி, இளநிலை உதவியாளர் சரவணன், செந்தாமரை செல்வி மற்றும் 19 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
- மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானம்
- 40 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புதிய ஊராட்சிமன்ற குழு அலுவலகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தீட்டுகிற திட்டங்கள் அனைத்தையும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழிகாட்டுதலின்படி மற்றும் கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்களின் ஆலோசனையின்படியும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் கொண்டு சென்று ஊரக வளர்ச்சித்துறையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக திகழ செய்ய அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொள்ளுதல், அரக்கோணம் வட்டம், தணிகைபோளுர், வாணியம்பேட்டை, நாயும் கண்டிகை, இச்சிப்புத்தூர் ராகவேந்திரா நகர் பகுதிகளில் வாழும் சலவை தொழிலாளர் 40 குடும்பத்தினர்களுக்கு தணிகைபோளுர் நரிக்குறவர் வாழும் பகுதிக்கு அருகாமையிலும் மற்றும் வாணியம்பேட்டை ஊற்றுக்குட்டை அருகாமையில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது.
அந்த இடத்தில் 40 குடும்பங்களுக்கு அரசு வழங்கும் வீட்டுமனை ஒதுக்கி பட்டா வழங்கியும், சலவை தொழில் செய்வதற்கு ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி, சலவை துறை, தண்ணீர் தொட்டிகள் அமைத்து கொடுக்க மாவட்ட வருவாய் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணை தலைவர் நாகராஜ், மாவட்ட ஊராட்சி செயலர் (பொறுப்பு) குமார், மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- எந்த பணிக்கும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பரிந்துரை கடிதங்கள் கொடுக்கவில்லை.
- ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கு தெரியாமலேயே நடந்துள்ள திட்டப் பணிகளின் முறைகேடுகள் நடந்துள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி மன்ற கூடத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் யசோதா மதிவாணன் தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஸ்வரன், கோவிந்தசாமி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் சரஸ்வதி முருகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஊராட்சி செயலாளர் மரியம் ரெஜினா வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் மாநில நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 73 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கும், 15-வது மத்திய நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்புதல் பெறப்பட்டது.
மேலும் மாவட்ட ஊராட்சி அலுவலகம் மூலம் செலவு செய்யப்பட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு ஒப்புதல் பெறப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பி னர்கள் பேசுகையில், தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு பொது நிதி மற்றும் 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் கடந்தாண்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் அனைத்தும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கு தெரியா மலேயே நடந்துள்ளது. இதில் எந்த பணிக்கும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பரிந்துரை கடிதங்கள் கொடுக்கவில்லை.
இந்த முறைகேட்டில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும் என்று கூறினர்.
இதற்கு பதில் அளித்து மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் கூறுகையில், மாவட்ட ஊராட்சி பொது நிதி மற்றும் 15-வது நிதி குழு மானிய திட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கு தெரியாமலேயே நடந்துள்ள திட்டப் பணிகளின் முறைகேடுகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கைகள் சமர்ப்பி க்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்று கூறினார்.






