என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய தயாரிப்பு நிறுவனம்"

    • இதில் டி சீரிஸ், ஜீ ஸ்டுடியோஸ் போன்ற பிரபல நிறுவனங்களும் உள்ளன.
    • விமர்சனங்களால் தனது விண்ணப்பத்தை ரிலையன்ஸ் திரும்பப்பெற்றது.

    26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் கடந்த புதன்கிழமை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானை தாக்கியது. மொத்தம் 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்ததாக ராணுவம் தெரிவித்தது.

    இந்த தாக்குதலில் 30 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பஹல்காமில் கணவனை இழந்து குங்குமத்தை இழந்ததால் பெண்களின் இழப்புக்கு பழிவாங்கும் விதமாக இந்த ஆபரேஷனுக்கு சிந்தூர் என பெயரிடப்பட்டது.

    இந்நிலையில் இந்த நடவடிக்கையை மையப்படுத்தி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் படம் எடுக்க பாலிவுட் தயாரிப்பாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். எனவே ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயருக்கு காப்புரிமை வாங்க தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.

    ராணுவ பின்னணியில் படங்களைத் தயாரிக்கும் நார்த் மேக்கர்ஸ் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயருக்கு உரிமை கோரி உள்ளது.

    இதில் டி சீரிஸ், ஜீ ஸ்டுடியோஸ் போன்ற பிரபல நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், 15 விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்த பிறகு, இந்த பெயர் விரைவில் ஒருவருக்கு வழங்கப்படும்.

    முன்னதாக இந்த பெயருக்கு அம்பானியின் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் விண்ணப்பித்திருந்தது.

    ஆனால் ராணுவ நடவடிக்கையையும் தேசபக்தியையும் வணிகமயமாக்குவதாக சமூக ஊடகங்களில் பலரும் விமர்சனங்களை தெரிவித்த நிலையில் தனது விண்ணப்பத்தை ரிலையன்ஸ் திரும்பப்பெற்றது.

    • உஸ்பெக்கிஸ்தானில் காய்ச்சல் மற்றும் சளிக்காக குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட டானிக் குடித்த 18 குழந்தைகள் இறந்துள்ளனர்.
    • குழந்தைகள் உயிரிழப்புக்கு அவர்கள் குடித்த டானிக் தான் காரணமா? அல்லது வேறு காரணங்களால் குழந்தைகள் இறந்தார்களா? என்பது பற்றி மருத்துவத்துறையினர் விசாரிக்க உள்ளனர்.

    உஸ்பெக்கிஸ்தான் நாட்டின் தூதரகம், இந்தியாவை சேர்ந்த குழந்தைகள் மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது புகார் கூறியுள்ளது.

    அந்த புகாரில் உஸ்பெக்கிஸ்தானில் காய்ச்சல் மற்றும் சளிக்காக குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட டானிக் குடித்த 18 குழந்தைகள் இறந்துள்ளனர்.

    இந்த மருந்தை இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று வழங்கி உள்ளது. குழந்தைகளின் சாவுக்கு இந்த மருந்துதான் காரணம். என்று கூறியுள்ளது.

    இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது உஸ்பெக்கிஸ்தான் தூதரகம் தெரிவித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குழந்தைகள் சாவுக்கு அவர்கள் குடித்த டானிக் தான் காரணமா? அல்லது வேறு காரணங்களால் குழந்தைகள் இறந்தார்களா? என்பது பற்றி மருத்துவத்துறையினர் விசாரிக்க உள்ளனர்.

    இதற்கிடையே இந்த பிரச்சினை குறித்து உஸ்பெக்கிஸ்தானுக்கு உதவ உலக சுகாதார அமைப்பு முன்வந்துள்ளது.

    ×