என் மலர்
நீங்கள் தேடியது "கீழே விழுந்து பலி"
- தெய்வானை குடை பிடித்தவாறு பின்னால் உட்கார்ந்து சென்றார்.
- பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே தெய்வானை பலியானார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த நொச்சிப்பட்டியை சேர்ந்தவர் முனுசாமி. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தெய்வானை (வயது 50).
ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தெய்வானை சிகிச்சை பெற்று விட்டு கணவரோடு இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும்போது, மழை காரணமாக தெய்வானை குடை பிடித்தவாறு பின்னால் உட்கார்ந்து சென் றார்.
ஊணாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வரும்போது பலத்த காற்றில் குடை பின்னுக்கு இழுத்ததால் கீழே விழுந்து தலையின் பின் பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே தெய்வானை பலியானார்.
இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- பாம்பு குறுக்கே வந்ததால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள மல்லிகாபுரம் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் என்பவரின் மனைவி காவேரி (வயது 48), விவசாயக் கூலி தொழிலாளி.
இவர் கடந்த 25-ந் தேதி பகல் 12 மணி அளவில் அதே கிராமத்தில் வயல்வெளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாம்பு குறுக்கே வந்ததால் அலறி அடித்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மோரணம் போலீசில் புகார் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






