என் மலர்
நீங்கள் தேடியது "வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு"
- வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று தனது கரும்புக்காட்டுக்குள் நுழைவதை கண்டு அச்சமடைந்தார்.
- வனத்துறை ஊழியர்கள் சிறு த்தையை வனப்பகுதிக்குள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு விரட்டினர்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சாரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
வனவிலங்கு அவ்வ போது ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், கால்நடைகளை வேட்டையாடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட மல்குத்தி புரம்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி குருசாமி (45). இவர் தனது விவசாய தோட்டத்தில் கரும்பு, மஞ்சள் சாகுபடி செய்துள்ளார்.
நேற்று வழக்கம் போல் தனது விவசாய தோட்டத்தில் பணி செய்து கொண்டி ருந்தார். அப்பொழுது வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று தனது கரும்புக்காட்டுக்குள் நுழைவதை கண்டு அச்சமடைந்தார்.
இது குறித்து உடனடியாக தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனச்சரகர் சதீஷ் தலைமை யிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கால் தடங்களை ஆய்வு செய்தார்.
பின்னர் சிறுத்தை கரும்பு காட்டுக்குள் நுளை ந்தது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு கவசம் அணிந்து கரும்பு காட்டுக்குள் புகுந்து சிறு த்தையை வனப்பகுதிக்குள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு விரட்டினர்.
தொடர்ந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வனத்து றையினர் கூறியதாவது:
சிறுத்தையை கூண்டு வைக்க பிடிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இங்கு கால்நடைகள் அதிக அளவில் இருப்பதால் சிறுத்தை மீண்டும் வர வாய்ப்புள்ளது. எனவே சிறுத்தையை கூண்டு வைத்து படிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகள், கால்நடைகளை வளர்ப்ப வர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். தனியாக வனப் பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- 200-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகின்றன.
- யானைகளை வனத்துறையினர் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, நொகனூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகின்றன.
இந்த யானைகள் அவ்வப்போது கிராமப்பகுதிகளில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி கிராம மக்களை அச்சுறுத்தி வந்தது. இந்த யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நொகனூர் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 70-க்கும் மேற்பட்ட யானைகளை வனத்துறையினர் கர்நாடக மாநிலத்திற்கு விரட்டினர்.
இந்த யானைகள் கூட்டத்தில் பிரிந்த 30 யானைகள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள முள் பிளாட் என்ற இடத்தில் தஞ்சமடைந்தன. இந்த யானைகளை நேற்று முன்தினம் வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் யானைகள் அங்கிருந்து ஆலள்ளி வனப்பகுதிக்கு சென்று முகாமிட்டன. கர்நாடகாவுக்கு விரட்டப்பட்டன இந்த நிலையில் நேற்று தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையில் வனவர்கள் காளியப்பன், வேணு மற்றும் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய 25-க்கும் மேற்பட்டோர் யானைகளை ஆலள்ளி பகுதியில் இருந்து பட்டாசுகள் வெடித்து கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது யானைகள் மரக்கட்டா வனப்பகுதி வழியாக தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை கடந்து சென்றன. யானைகள் பாதுகாப்பாக சாலையை கடக்க அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
யானைகள் சாலையை கடந்து சென்ற பின்னர் அப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இந்த யானைகளை வனத்துறையினர் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால் தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள், விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.






