என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திறந்தவெளி கிணறு"

    • மழை பெய்து வரும் நிலையில் இந்த கிணறு நிரம்பி வழிகிறது.
    • தடுப்பு கம்பி அல்லது எச்சரிக்கை பதாகைகள் வைக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அடுத்து உள்ளது செங்கப்பள்ளி.‌இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று சந்தை கூடும். அப்போது சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள்.

    சந்தை அருகில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இடத்தின் அருகே பெரிய அளவிலான திறந்தவெளி கிணறு ஒன்று உள்ளது. தற்போது மழை பெய்து வரும் நிலையில் இந்த கிணறு நிரம்பி வழிகிறது.

    இதனால் தரையோடு தரையாக காணப்படும் இக்கிணறு இருக்கும் இடம் தெரியாமல் எவரேனும் கால் வைத்தால் கிணறுக்குள் விழும் அபாயகரமான நிலை உள்ளது.

    ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விஷயத்தில் உடனே தலையிட்டு தடுப்பு கம்பி அல்லது எச்சரிக்கை பதாகைகள் வைக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாலமலை கிராம ஊராட்சியில் ரூ.13.87 லட்சத்தில் ஆரம்பிக்கப்பட்ட திறந்த வெளி கிணறு அமைக்கும் பணியினை சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் ஆய்வு செய்தார்.
    • 20 விவசாயிகளுக்கு 20 ஏக்கரில் நுண்ணுயிர் பாசனம் அமைத்து தரப்படும்.

    மேட்டூர்:

    அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கீழ், சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலமலை கிராம ஊராட்சியில் ரூ.13.87 லட்சத்தில் ஆரம்பிக்கப்பட்ட திறந்த வெளி கிணறு அமைக்கும் பணியினை சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் ஆய்வு செய்தார்.

    இந்த திறந்த வெளி கிணறு பணி முடிக்கப்பட்ட பின் 20 விவசாயிகளுக்கு 20 ஏக்கரில் நுண்ணுயிர் பாசனம் அமைத்து தரப்படும். இதனால் 20 ஏக்கர் தரிசு நில தொகுப்பு விவசாயிகள் பயனடைவார்கள்.

    இந்த ஆய்வின்போது தரிசு நில தொகுப்பு விவசாயிகளிடம் பயிர் சாகுபடி மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து இணை இயக்குனர் சிங்காரம் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

    இதே போல், நவபட்டி மற்றும் பண்ணவாடி கிராமத்தை சேர்ந்த தரிசு நிலத் தொகுப்பு விவசாயிகளுக்கு வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் தொழில்நுட்ப ஆலோசனை கள் வழங்கினார்.

    ×