என் மலர்
நீங்கள் தேடியது "27.76 லட்சம் பேருக்கு"
- ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 27.76 லட்சம் பேர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.
- தற்போதைய நிலையில் மாவட்டத்தில் 3,406 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிக அளவில் இருந்தது. மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர் மாநகராட்சி ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக தற்போது மாவட்டத்தில் கொேரானா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.
இது குறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் 23 லட்சத்து 77,315 பேர் உள்ளனர். இவர்களில் 1 லட்சத்து, 36,658 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 1 லட்சத்து 35,922 பேர் குணமடைந்தனர்.
இன்றைய நிலையில் 2 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரேனாவால் இறந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.12.74 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 27.76 லட்சம் பேர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.
மாவட்ட அளவில் 18 வயதுக்கு மேற்பட்ட 16.56 லட்சம் பேர் முதல் தவணையும், 15.38 லட்சம் பேர் 2ம் தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் 90,763 பேர் முதல் தவணையும், 80,658 பேர் 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
12 முதல் 14 வயதினரில், 56,519 பேர் முதல் தவணையும், 45,679 பேர் 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மொத்தமாக 18 லட்சத்து 3,771 பேர் முதல் தவணை யும், 16 லட்சத்து, 64,180 பேர், 2-ம் தவணையும், 2 லட்சத்து, 13,545 பேர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.
தற்போதைய நிலையில் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, 8 அரசு மருத்துவமனை, 76 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3,406 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






