என் மலர்
நீங்கள் தேடியது "3 arrested 3 பேர் கைது"
- தாதகாப்பட்டி சண்முக நகர், சிங்கார முனியப்பன் கோவில் அருகே மாட்டிறைச்சி கடை நடத்தி வந்தார்.
- பாதுஷா மைதீன் கடந்த மாதம் 18-ந் தேதி அளித்த மனுவை ஆய்வு செய்து விசாரித்த, சுகாதார ஆய்வாளர் கடந்த மாதம் 23-ந் தேதி இது குறித்து பதில் அறிக்கை தந்தார்.
அன்னதானப்பட்டி:
சேலம் டவுன், ஜலால்புறா, அதியமான் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாதுஷா மைதீன் (வயது 30). இவர் தாதகாப்பட்டி சண்முக நகர், சிங்கார முனியப்பன் கோவில் அருகே மாட்டிறைச்சி கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் அந்த பகுதியில் கடை நடத்த எதிர்ப்பு வந்ததால் கடை மூடப்பட்டது.
அனுமதி மறுப்பு
இது குறித்து சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம், உதவி ஆணை–யாளர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு:
பாதுஷா மைதீன் கடந்த மாதம் 18-ந் தேதி அளித்த மனுவை ஆய்வு செய்து விசாரித்த, சுகாதார ஆய்வாளர் கடந்த மாதம் 23-ந் தேதி இது குறித்து பதில் அறிக்கை தந்தார். அதில் போலீசாரிடம் இருந்து தடையின்மை சான்றிதழ் பெற்று, பின்னர் கடை நடத்திக் கொள்ளலாம் என கடந்த 24-ந் தேதி கடிதம் மூலம் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
விண்ணப்பம்
இந்த நிலையில் பாதுஷா மைதீன் கடந்த 5-ந் தேதி மீண்டும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்திருந்தார். இதனை மேற்கோள் காட்டி, கடந்த மாதம் 24-ந் தேதி கடை நடத்த வழங்கப்பட்ட அனுமதி கடிதம், ரத்து செய்யப்பட்டது. மேலும் மாட்டிறைச்சி கடை, குறிப்பிட்ட இடத்தில் நடத்துவது தொடர்பாக ஏற்கனவே அங்கு இருமுறை சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது.
இதையடுத்து சேலம் வட்டாட்சியர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதில் உணவு பாதுகாப்புத் துறையினர், வருவாய்த் துறையினர், அன்னதானப்பட்டி போலீசார் மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆகியோர் இணைந்து அந்த பகுதியில் கள ஆய்வு செய்தனர். மேற்கண்ட கூட்டு தணிக்கைக் குழுவினர் அளித்த அறிக்கையின் படி, அங்கு மாட்டிறைச்சி கடை நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கைது
இந்நிலையில், மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பாதுஷா மைதீன் குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் ஆகியோர் இன்று மாநகராட்சி அலுவலகத்திற்கு, மீண்டும் கடை நடத்த அனுமதி கேட்டு கையில் பதாகையோடு மனு வழங்க வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் இளங்கோவன் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி மறைந்தனர்.
சேலம்:
சேலம் சின்ன திருப்பதி சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 54). இவர் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் இளங்கோவன் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி மறைந்தனர்.
இதுகுறித்து ஏட்டு இளங்கோவன் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர். போலீஸ் ஏட்டுவிடமே கைவரிசை காட்டப்பட்ட இந்த வழிபறி சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.
இதனிடையே இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான தனிப்படை போலீசார், சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்தனர். மேலும் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் யார்? என கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியை சேர்ந்த ேகாவிந்தராஜ் மகன் தீனா (28), சேலம் சிவதாபுரம் பனங்காடு ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் சந்தோஷ் (26), அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் அஜிஸ் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், அவர்களை கைது செய்து, ஏட்டுவிடம் வழிபறி செய்த செல்போனை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். வழிபறி கொள்ளையர்களை விரைந்து கண்டுபிடித்து கைது செய்த தனிப்படை போலீசாரை சேலம் மாநகர காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.
- கார்த்திக் (வயது 33). இவர் சரக்கு ஆட்டோவில் வைத்து ஊர் ஊராக வெங்காயம் வியாபாரம் செய்து வருகிறார்.
- 3 பேர் வெங்காயத்தைகையில் அள்ளிக்கொண்டு வெங்கா யத்தை வாங்காம லும், வியா பாரம் செய்ய விடாமலும் வியாபாரி கார்த்திக்கிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
பரமத்தி வேலூர்:
சேலம் மாவட்டம் பூவா லூர் அருகே உள்ள பருத்திக் காடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் கார்த்திக் (வயது 33). இவர் சரக்கு ஆட்டோவில் வைத்து ஊர் ஊராக வெங்காயம் வியாபாரம் செய்து வருகி றார். நேற்று பரமத்திவேலூர் பழைய தேசிய நெடுஞ்சா லை யில் உள்ள சினிமா தியேட்டர் அருகே ஆட்டோ வில் வைத்து வெங்காயம் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 3 பேர் வெங்காயத்தை கை யில் அள்ளிக்கொண்டு வெங்கா யத்தை வாங்காம லும், வியா பாரம் செய்ய விடாமலும் வியாபாரி கார்த்திக்கிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் கார்த்திக்கை தரக்கு றைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததுடன் சரக்கு ஆட்டோவின் முன் பக்க கண்ணாடியையும் உடைத்துள்ளனர்.
இது குறித்து கார்த்திக் பரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சரக்கு ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து வெங்காய வியாபாரி கார்த்திக்கிற்கு கொலை மிரட்டல் விடுத்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சதீஷ்கு மார் (28), பொய்யே ரியை சேர்ந்த சிட்டிபாபு(28), நன்செய் இடையாறை சேர்ந்த கோகுல் (25) ஆகிய 3 பேர் மீதும் பரமத்திவேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் ராதா வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி பரமத்தி குற்ற வியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு நீதிபதி யின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.






