என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி வேலூரில் சரக்கு ஆட்டோ கண்ணாடியை உடைத்து தகராறு செய்த 3 பேர் கைது
    X

    பரமத்தி வேலூரில் சரக்கு ஆட்டோ கண்ணாடியை உடைத்து தகராறு செய்த 3 பேர் கைது

    • கார்த்திக் (வயது 33). இவர் சரக்கு ஆட்டோவில் வைத்து ஊர் ஊராக வெங்காயம் வியாபாரம் செய்து வருகிறார்.
    • 3 பேர் வெங்காயத்தைகையில் அள்ளிக்கொண்டு வெங்கா யத்தை வாங்காம லும், வியா பாரம் செய்ய விடாமலும் வியாபாரி கார்த்திக்கிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    சேலம் மாவட்டம் பூவா லூர் அருகே உள்ள பருத்திக் காடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் கார்த்திக் (வயது 33). இவர் சரக்கு ஆட்டோவில் வைத்து ஊர் ஊராக வெங்காயம் வியாபாரம் செய்து வருகி றார். நேற்று பரமத்திவேலூர் பழைய தேசிய நெடுஞ்சா லை யில் உள்ள சினிமா தியேட்டர் அருகே ஆட்டோ வில் வைத்து வெங்காயம் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த 3 பேர் வெங்காயத்தை கை யில் அள்ளிக்கொண்டு வெங்கா யத்தை வாங்காம லும், வியா பாரம் செய்ய விடாமலும் வியாபாரி கார்த்திக்கிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் கார்த்திக்கை தரக்கு றைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததுடன் சரக்கு ஆட்டோவின் முன் பக்க கண்ணாடியையும் உடைத்துள்ளனர்.

    இது குறித்து கார்த்திக் பரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சரக்கு ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து வெங்காய வியாபாரி கார்த்திக்கிற்கு கொலை மிரட்டல் விடுத்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சதீஷ்கு மார் (28), பொய்யே ரியை சேர்ந்த சிட்டிபாபு(28), நன்செய் இடையாறை சேர்ந்த கோகுல் (25) ஆகிய 3 பேர் மீதும் பரமத்திவேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் ராதா வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி பரமத்தி குற்ற வியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு நீதிபதி யின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×