என் மலர்
நீங்கள் தேடியது "தேர்வு போட்டிகள்"
- மாநில அளவிலான தேர்வு போட்டிகள் வருகிற 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
- 14 வீராங்கனைகள் தேர்வு செய்தவற்கான தேர்வு போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிலும் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள கூடைப்பந்து(ஆண், பெண்), கைப்பந்து (ஆண், பெண்), கால்பந்து (பெண்), ஆக்கி (ஆண்), கோ-கோ (பெண்) ஆகிய விளையாட்டுகளில் தமிழக அணி தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள் வருகிற 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
அதன்படி, வருகிற 13-ந் தேதி காலை 7 மணிக்கு கால்பந்து போட்டிக்கான 20 வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான தேர்வு போட்டி சென்னை ஜவகர்லால் நேரு
ஸ்டேடியத்திலும், ஆக்கி போட்டிக்கான 18 வீரர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு போட்டி திருச்சி அறிஞர் அண்ணா ஸ்டேடியத்திலும், கோ-கோ போட்டிக்கு 15 வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான தேர்வு போட்டி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வி பயிற்சி கல்லூரியிலும், கைப்பந்து போட்டி 14 வீரர்கள், 14 வீராங்கனைகள் தேர்வு செய்தவற்கான தேர்வு போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிலும் நடைபெறுகிறது.
14-ந் தேதி காலை 7 மணிக்கு கூடைப்பந்து போட்டி 12 வீரர்கள், 12 வீராங்கனைகள் தேர்வு செய்வதற்கான தேர்வு போட்டி சென்னை நேரு உள் விளையாட்ட அரங்கிலும் நடைபெறுகிறது. இந்த மாநில அளவிலான தேர்வுப் போட்டியில் கலந்து கொள்ளும் விளையாட்டு, வீரர், வீராங்கனைகள் 1.1.2004-க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஆதார் கார்டு, மேல்நிலைப்பள்ளி சான்றிதழ், 5 ஆண்டுகளுக்கு முன்னர் நகராட்சி அல்லது கிராம ஊராட்சி ஆகியவற்றிடமிருந்து பெறப்பட்ட பிறப்புச்சான்றிதழ், இந்த மூன்றில் ஏதேனும் இரண்டு சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும்.
போட்டியில் தேர்வு செய்யப்படுபவர்கள் தவிர்க்க முடியாக காரணத்தால் வர முடியாத நிலையில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாநில தேர்வுப்போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு தினப்படி, பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இப்போட்டியை உதவி கலெக்டர் பாபு தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
- மாவட்ட அளவில் தேர்வாகும் மாணவ, மாணவிகள், சென்னையில் நடக்கும் மாநில அளவிலான தேர்வுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
கிருஷ்ணகிரி,
விளையாட்டு விடுதி, மற்றும் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான தேர்வு போட்டிகள் கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது.
தேர்வு போட்டிகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த விளையாட்டு விடுதி மற்றும் விளையாட்டு பள்ளிகளில், 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்புகளில், 2023-2024-ம் ஆண்டிற்கு மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.
இதில், தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், தேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், கபடி, டென்னிஸ், ஜூடோ மற்றும் ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டிற்கு தேர்வுப் போட்டிகள் நடந்தன.
இப்போட்டியை உதவி கலெக்டர் பாபு தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதில், 147 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஸ்குமார் செய்திருந்தார். மேலும் பயிற்றுனர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர். மாவட்ட அளவில் தேர்வாகும் மாணவ, மாணவிகள், சென்னையில் நடக்கும் மாநில அளவிலான தேர்வுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.






