என் மலர்
நீங்கள் தேடியது "சாகச சுற்றுலா தலம்"
- அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்
- படகு இல்லம், செயற்கை நீரூற்று இடங்களை ஆய்வு செய்தார்
ஜோலார்பேட்டை:
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் சாகச சுற்றுலா தலங்கள் அமைக்க சுற்றுலா துறை அமைச்சர் அதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவிற்கு திருப்பத்தூர் கலெக்டர் அமர்குஷ்வாஹா, சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆகியோர் தலைமை தாங்கினார். க.தேவராஜி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது:-
ஏலகிரி மலையில் சுற்றுலாத் துறையின் மூலமாக சுற்றுச்சூழல் தளம் கொண்டுவர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழல் தளம் வர இருக்கிறது. தற்போதைய மக்கள் அதிக அளவில் மலைகளைப் பார்த்தபடி இயற்கையோடு ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்.
அதன் அடிப்படையில் சுற்றுலா துறை மூலம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 10 முதல் 15 டென்ட் ஆறு ஏக்கர் பரப்பளவில் சுற்று சூழல் தளம் மற்றும் வெவ்வேறு சாகச சுற்றுலாக்கள அந்த சுற்றுச்சூழல் தளத்தில் வர இருக்கிறது.
இதற்காக சுற்றுலா துறை மூலம் செப்டம்பர் மாதத்தில் விதிமுறைகள் மற்றும் அரசாணை வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் நேற்று ஏலகிரி மலையில் அத்தனாவூர் கிராமத்தில் இப்பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஏலகிரி மலை சிறந்த சுற்றுலா தளம் மற்றும் நிறைய சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் ஆய்வு மேற்கொண்டு மற்றும் சாத்திய கூறுகள் அறிந்து இந்த இடத்தை தேர்வு செய்து திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. ஏலகிரி மலைக்கு வருகின்ற நெடுஞ்சாலைகளை சீர் செய்வதற்கு துறை அமைச்சரான பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை விடுத்து, நெடுஞ்சாலைகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு முழுவதுமாக 1500-க்கு மேல் சுற்றுலா தளங்கள் இருக்கிறது அதில் 300 இடங்களை தேர்வு செய்து மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருடத்திற்கு 10 முதல் 15 இடங்களை தேர்வு செய்து தமிழ்நாடு அரசின் நிதியின் மூலம் புதுவகையான சுற்றுலா மேம்பாட்டினை கொண்டுவர இருக்கிறோம்.
வருங்காலங்களில் சுற்றுலா துறையின் மூலம் பல சுற்றுலா தளங்கள் புதுப்பித்து பராமரிக்கப்படும். மேலும் புதுவிதமான சுற்றுலா அனுபவங்களை சுற்றுலா பயணிகளுக்கு கொடுக்க இருக்கிறோம்.
இதுதவிர்த்து மற்ற மாவட்ட சுற்றுல்லாத்தலமான திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலை, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலைக்கும், ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள பிறப்பன் வலசை, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சித்தாறு, தென்காசி மாவட்டத்தில் உள்ள குண்டார் அணை சென்னையில் உள்ள கொலவாய் ஏறி, பூண்டி போன்ற வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் மேம்பட உள்ளது.
சுற்றுலா சாகச தலங்களை பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் மூலம் செயல்படுத்தப்பட இருக்கிறது. தமிழ்நாடு அரசு முன்வந்து சுற்றுலாத்துறை மூலம் சாகச சுற்றுலா தலங்கள் கொண்டுவருவதற்கான விதிமுறைகளை சுலபமாக்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் கு.செல்வராசு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட பால்வளத் தலைவர் இராஜேந்திரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் கதேந்திரகுமார், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யா சதிஷ் குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கவிதா தண்டபாணி, சிந்துஜா ஜெகன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உமா, இலட்சுமி ஏலகிரிமலை ஊராட்சி மன்ற தலைவர் இராஜஸ்ரீ கிரிவேலன், உதவி செயற்பொறியாளர் இரவி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வத்தல்மலையில் ரூ.2.23 கோடி மதிப்பில் சாகச சுற்றுலாப்பணிகள் ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
- சுற்றுலாத்துறை அமைச்சர் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழாவினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இவ்விழா வில் சுற்றுலாத்துறை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, திட்ட விளக்கவுரை ஆற்றினார். மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவானது நேற்று தொடங்கி நாளை 4.8.2023 வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறுகின்றது.
இவ்விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
தருமபுரி மாவட்ட ஒகேனக்கல் சுற்றுலாதலத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்து காவிரி ஆற்றினை பார்த்துவிட்டு மக்கள் செல்கின்றனர். மேலும், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை ரூ.17.58 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தும் விதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள வேண்டுமென இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தருமபுரியில் சுற்றுலாவை மேம்படுத்த வத்தல்மலையில் ரூ.2.23 கோடி மதிப்பில் சாகச சுற்றுலாப்பணிகள் ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுபோன்ற பல்வேறு சுற்றுலா திட்டப்பணிகளால் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும், தனி மனித வருமானம் அதிகரிப்பதோடு, மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியும் மேன்மை அடையும். மக்கள் சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சுற்றுலா பயணிகளுக்கு நல்ல ஆதரவு அளித்து, சுற்றுலாத்த்துறையை வளர்த்து எடுக்க வேண்டும்.
மேலும், இந்த விழாவை சிறப்பிக்கும் வகையில் ஏறத்தாழ 77 பயனாளிகளுக்கு ரூ.72.10 லட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து, வத்தல்மலையில் அமைச்சர் ராமச்சந்திரன் சுற்றுலாவை மேம்படுத்தும் பொருட்டு ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா மற்றும் திறந்தவெளி முகாம்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமாகவும், விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இவ்விழாவில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், மாவட்ட வன அலுவலர் அப்பல நாயுடு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கவிதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் கதிரேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






