என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல் சாசன தினம்"

    • இளைஞர்கள் அதிக அளவில் விவாதங்களில் பங்கேற்று இந்திய அரசியல் அமைப்பை வலுப்படுத்த வேண்டும்.
    • மகிழ்ச்சியாக வைத்திருப்பதுடன் மக்களிடம் இணக்கமாக நடப்பதும் ஆளும் அதிகாரத்தின் முக்கிய வேலையாகும்.

    1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அரசியல் சாசனம் பாராளுமன்றத்தில் முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை நினைவில் கொள்ளும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இன்றைய தினம் அரசியல் சாசன தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முன்பு தேசிய சட்ட தினமாக கடை பிடிக்கப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட்டில் அரசியல் சாசன தின விழா இன்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மெய் நிகர் நீதி கடிகாரம், கைப்பேசி செயலி 2.0 டிஜிட்டல் நீதிமன்றம், எஸ். 3 வாஸ் இணையதளம் ஆகிய நீதித்துறை தொடர்பான சேவைகளை தொடங்கி வைத்தார்.

    டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் இந்திய ஜனநாயகத்தின் தாய் என்ற தலைப்பில் அரசியல் சாசன நிகழ்ச்சிகள் நடந்தது. அரசியல் சாசன தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பொது மக்கள், பாதுகாப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நமது அரசியல் சாசனமே மிகப்பெரிய பலமாகும். அரசியல் சாசனம் நமக்கு கொடுத்து இருப்பது மிகப்பெரிய நம்பிக்கையாகும்.

    இளைஞர்கள் அதிக அளவில் விவாதங்களில் பங்கேற்று இந்திய அரசியல் அமைப்பை வலுப்படுத்த வேண்டும். சரியான நேரத்தில் நீதி கிடைக்க நமது நீதித்துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்கிறது.

    மக்களின் அடிப்படை கடமைகளை நிறைவேற்றுவது முன்னுரிமையாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக வைத்திருப்பதுடன் மக்களிடம் இணக்கமாக நடப்பதும் ஆளும் அதிகாரத்தின் முக்கிய வேலையாகும்.

    இந்தியாவின் வளர்ச்சி வலுவான பொருளாதாரம். சர்வதேச அளவில் நமக்கு நற்பெயர் பெற்று கொடுத்து உள்ளது.

    இவ்வாறு மோடி பேசினார்.

    விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

    • பாராளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது.
    • 370-வது சட்ட பிரிவை காங்கிரஸ் தவறுதலாக பயன்படுத்தியது.

    புதுடெல்லி:

    அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி பாராளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது.

    பாராளுமன்ற மக்களவையில் கடந்த 14 மற்றும் 15-ந் தேதியில் விவாதம் நடைபெற்றது. மேல்சபையில் நேற்று விவாதம் தொடங்கியது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    அதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உரையாற்றினார்.

    மேல் சபையில் இன்று 2-வது நாள் விவாதத்தில் மத்திய மந்திரி ஜே.பி.நட்டா பேசியதாவது:-

    "நாம் கொண்டாடும் இந்த விழா, அரசியலமைப்பின் மீதான நமது அர்ப்பணிப்பை, வலுப்படுத்துகிறது. தேசிய இலக்கை நிறைவேற்ற இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்துவோம் என்று நான் நம்புகிறேன்.

    இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது மிகப்பெரிய ஜனநாயகம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாய் என்றும் நமது பிரதமர் கூறினார்.

    நமது அரசியலமைப்பை வடிவமைத்த அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களுக்கு நாடு கடமைப்பட்டுள்ளது. இந்திய நெறிமுறைகளின் படி ஜனநாயகம் என்பது சுதந்திரம், ஏற்றுக் கொள்ளுதல், சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியது. குடிமக்கள் கண்ணியமான வாழ்க்கை நடத்த அனுமதிக்கிறது.

    370-வது சட்ட பிரிவை காங்கிரஸ் தவறுதலாக பயன்படுத்தியது. அவசர கால நிலையில் பலரும் குறி வைக்கப்பட்டனர்.

    இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

    ×