என் மலர்
நீங்கள் தேடியது "ரூ.85 கோடி மதிப்பில்"
- பவானி முதல் சின்ன பள்ளம் வரை ரூ.85 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணி நடைபெற உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
- மேட்டூர் மெயின் ரோட்டில் சிறிய பாலங்கள் 45, பெரிய பாலங்கள் இரண்டு புதிய பாலங்கள் இரண்டு 49 பாலங்கள் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
பவானி:
ஈரோட்டில் இருந்து அக்ரஹாரம், ஆர்.என். புதூர், லட்சுமி நகர், பவானி, அம்மாபேட்டை, மேட்டூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் செல்ல இந்த மேட்டூர் மெயின் ரோடு பிரதான சாலையாக அமைய பெற்று உள்ளது.
இந்த மேட்டூர் மெயின் ரோட்டில் தினசரி நூற்றுக்கணக்கான பைக், பஸ், கார், வேன், லாரி மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகிறது.
நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் தொப்பூர், மேட்டூர், பவானி, ஈரோடு ஜிரோ பை ஜிரோ வரை 7 மீட்டராக உள்ள இந்த தார் ரோட்டை தற்போது 10 மீட்டர் அகலம் ஏற்படுத்தும் வகையில் ரோட்டின் இரு பகுதிகளிலும் மூன்று மீட்டர் அகலம் ஏற்படுத்தும் வகையில் கடின புருவல்கள் கொண்ட தார் சாலை அமைக்கும் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி தொப்பூரில் தொடங்கியது.
அதேபோல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த பணியானது தற்போது பவானி, குப்பிச்சிபாளையம், பெரும்பள்ளம் மற்றும் பிளாட்டினம் மஹால் என பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தனித்தனி ஒப்பந்ததாரர்கள் மூலம் சாலை விரிவாக்க பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள தாகவும், பவானி முதல் சின்ன பள்ளம், பிளாட்டினம் மஹால் வரை ரூ.85 கோடி மதிப்பீட்டில் இப்பணி நடைபெற உள்ளதாக இத்துறை சார்ந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மேட்டூர் மெயின் ரோட்டில் சிறிய பாலங்கள் 45, பெரிய பாலங்கள் இரண்டு புதிய பாலங்கள் இரண்டு 49 பாலங்கள் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தச் சாலை விரிவாக்க பணிகள் நிறைவடைந்த பின்னர் இவ் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வாகன போக்குவரத்து ஏற்படுவதை தவிர்க்கும் விதமாகவும், அதிக அளவில் ஏற்படும் விபத்துகளை குறைக்கவும் இந்த விரிவாக்க பணிகள் மூலமாக தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் பணியின் போது மேட்டூர் மெயின் ரோட்டில் உள்ள இரு புறமும் வளர்ந்துள்ள புளிய மரங்கள் அப்புறப்படுத்தாமல் அகலபடுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அதே போல் பவானி நகரப் பகுதியில் உள்ள மேட்டூர் மெயின் ரோட்டில் இடையூறாக காணப்படும் மரங்கள் கண்டறியப்பட்டு அவைகள் அப்புறப்படுத்தப்பட்டு சாலை விரிவாக்க பணி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.






