என் மலர்
நீங்கள் தேடியது "நானா படோலே"
- மகா விகாஸ் அகாடி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
- மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளிடையே நல்லிணக்கம் இருக்கிறது.
மும்பை
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவார்க்கர் குறித்து சமீபத்தில் பேசியதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்தது.
அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதாவும் விவசாய விளைபொருள் சந்தை குழு தேர்தலில் இணைந்து போட்டியிட்டதை காங்கிரஸ் கட்சி விமர்சித்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் பிரிதிவிராஜ் சவானும் தேசியவாத காங்கிரசை விமர்சித்து இருந்தார்.
இதனால் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் நானா படோலே நேற்று கூறியதாவது:-
மகா விகாஸ் அகாடி கூட்டணி பலமாக உள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்திப்பு குறித்து ஊகங்களின் அடிப்படையில் கேள்விகளை எழுப்ப தேவையில்லை.
மகா விகாஸ் அகாடி தலைவர்கள் ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்திக்கிறார்கள். மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளிடையே நல்லிணக்கம் இருக்கிறது. கூட்டணி பிரபலமடைந்து வருவதைக் கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன. அதனால் தான் மகா விகா விகாஸ் அகாடி கூட்டணியில் பிளவுகள் இருப்பதாக வதந்திகள் பரப்பப்படுகிறது. எனவே தான் நாக்பூரில் நடத்த உள்ள பொதுகூட்டத்தை தடுக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது.
சத்ரபதி சாம்பாஜி நகரில் மகா விகாஸ் அகாடி நடத்திய கூட்டத்திற்கு பிறகு மாநிலம் முழுவதும் இதுபோன்ற பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். ஏப்ரல் 16-ந் தேதி அன்று திட்டமிட்டபடி நாக்பூரில் பொதுகூட்டம் நடைபெறும்.
அதைத்தொடர்ந்து அமராவதி, புனே, கோலாப்பூர், நாசிக் மற்றும் மும்பையில் கூட்டணி சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு மந்திரி 6 மாவட்டங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
- மகாராஷ்டிராவில் தற்போது 18 மந்திரிகள் உள்ளனர்.
நாந்தெட் :
மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் உருவான மகா விகாஸ் அகாடி ஆட்சி, சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே அணியின் அதிருப்தியால் கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 40 பேரின் உதவியுடன், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றினார். இந்த ஆட்சியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
இந்தநிலையில் நாந்தெட்டில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நானா படோலே கூறியதாவது:-
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஏன் இன்னும் மந்திரி சபையை விரிவாக்கம் செய்யவில்லை? ஏன் என்றால் அவ்வாறு செய்தால் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும். ஊழல் மற்றும் அதனால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. ஒரு மந்திரி 6 மாவட்டங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். என்ன நடக்கிறது எந்த மராட்டியத்தில்?.
முந்தைய மகா விகாஸ் அகாடி அரசு ஆட்சியை முதல்-மந்திரி ஏக்நாத் ஷண்டே தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் அவர் உள்பட தற்போது பதவியில் உள்ள பல மந்திரிகளும் மகா விகாஸ் அகாடி அரசின் ஒரு பகுதியாக இருந்துள்ளனர் என்பதை மறந்துவிட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் தற்போது 18 மந்திரிகள் உள்ளனர். ஏக்நாத் ஷிண்டே அணி மற்றும் அதன் கூட்டணி கட்சியான பா.ஜனதாவில் தலா 9 மந்திரிகள் உள்ளனர்.
மாநிலத்தில் அதிகபட்சமாக 43 மந்திரிகள் வரை இருக்கலாம்.