என் மலர்
நீங்கள் தேடியது "suicide by hanging தூக்குப்போட்டு தற்கொலை"
- கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.
- இதில் மனம் உடைந்த விஜயலட்சுமி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வாழக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் . மெக்கானிக். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 23). இவர்களுக்கு 2½ வருடத்திற்கு முன்பு திருமணம் ஆன ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். நேற்று மீண்டும் அவர்ளுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த விஜயலட்சுமி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடப்பாடி போலீசார், விஜயலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின் றனர்.மேலும் திருமணம் ஆகி 2½ வருடம் ஆவதால் ஆர்.டி.ஓ விசாரனை நடத்தி வருகிறார்.
- காய்கறி வியாபாரி. இவரது மனைவி மணிமேகலை (வயது 31). தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
- இதில் மனம் உடைந்த மணிமேகலை, வீட்டின் அறைக்குள் சென்று தூக்கு போட்டுக் கொண்டார்.
சேலம்:
சேலம் செவ்வாய்ப் பேட்டை குப்புசாமி தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். காய்கறி வியாபாரி. இவரது மனைவி மணிமேகலை (வயது 31). தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று வழக்கம்போல், அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த மணிமேகலை, வீட்டின் அறைக்குள் சென்று தூக்கு போட்டுக் கொண்டார்.
வெகுநேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த ரவிக்குமார், ஜன்னல் வழியாக பார்த்தபோது மணிமேகலை தூக்கில் தொங்கி உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சிய டைந்தார்.
இதை யடுத்து ரவிக்குமார், கதவை திறந்து உள்ளே சென்று மணி மேகலையை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து செவ்வாய்ப் பேட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.
- ரிக் வண்டியில் வேலை பார்த்து வந்தார்.இவருக்கு மீனா என்ற மனைவியும், கோபி ,ரோகித் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
- இந்நிலையில் ரிக் வண்டியில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்த பாஸ்கரன் வீட்டில் இருக்கும் போது தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டன்பட்டி அருகே மாரப்ப நாயக்கன்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் பாஸ்கரன்(38).
இவர் ரிக் வண்டியில் வேலை பார்த்து வந்தார்.இவருக்கு மீனா என்ற மனைவியும், கோபி ,ரோகித் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் ரிக் வண்டியில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்த பாஸ்கரன் வீட்டில் இருக்கும் போது தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். அப்போது மனைவி தட்டி கேட்டுள்ளார். அதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்டு மீனா தனது இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு கணக்கம்பாளையத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார் .இதனால் விரக்தியில் இருந்த பாஸ்கரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வேல கவுண்டன்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காதர்கான் (வயது 23). இவர் லைன்மேடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
- டீக்கடை மாடியில் இருக்கும் அறையில் தங்குவது வழக்கம்.
சேலம்:
சேலம் லைன்மேடு மெகபூப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பஷீர்கான். இவரது மகன் காதர்கான் (வயது 23). இவர் லைன்மேடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்து டீக்கடை மாடியில் இருக்கும் அறையில் தங்குவது வழக்கம்.
நேற்று வழக்கம் போல் வேலை முடிந்து அறைக்கு சென்று தங்கி உள்ளார். இன்று காலை வெகு நேரம் ஆகியும் கடைக்கு வராததால் சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு காதர்கான் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி அவர், உடனடியாக அன்ன தானப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் காதர்கானுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள், பணத்தை அடிக்கடி கேட்டு, தொல்லை கொடுத்தனர். கடனை கட்ட முடியததால் மனமுடைந்த காதர்கான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
- தியாகராஜன் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு வரும்போது மது அருந்திவிட்டு வந்துள்ளார்.
- இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் காட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 32). இவர் மேஸ்திரி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி (25). இவர்களுக்கு விஷ்ணு(4) என்ற மகனும், கனிஷ்கா (2 1/2) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் தியாகராஜன் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு வரும்போது மது அருந்திவிட்டு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தி அடைந்த மீனாட்சி கடந்த 21-ந் தேதி, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து மீனாட்சியை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மீனாட்சி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மீனாட்சிக்கு திருமணம் ஆகி 7 வருடங்களே ஆவதால், இதுகுறித்து திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா விசாரணை நடத்தி வருகிறார்.






